கோவை: கோவை வனச்சரகத்திற்கு உட்பட்ட தடாகம் பகுதியில் ஒற்றை காட்டு யானை தாக்கி வட மாநில தொழிலாளி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவை வனச்சரகத்திற்கு உட்பட்ட தடாகம் பகுதியில் ஒற்றை காட்டு யானை தாக்கி வட மாநில தொழிலாளி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளான தடாகம், சின்ன தடாகம், சோமையாம் பாளையம், எண் 24 .விரபாண்டி போன்ற ஊர்களில் அதிகளவு செங்கல் சூளைகள் இயங்கி வருகின்றன. தமிழக தொழிலாளர்கள் மட்டும் இல்லாமல் வடமாநில தொழிலாளர்களும் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று இரவு ARS சேம்பரில் வேலை பார்க்கும் அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த சரிதுல் இஸ்லாம் (20) என்பவர் பாத்ரூம் செல்வதற்காக காட்டுப்பக்கம் சென்றுள்ளார்.
அப்போது, வனப்பகுதியில் இருந்த ஒற்றை காட்டு யானை தாக்கியதில் இடது முழங்காலுக்கு கீழே எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இது குறித்து உடனடியாக 108 ஆம்புலன்ஸ் தகவல் தெரிவிக்கப்பட்டு முதலுதவி அளித்தனர். மேலும், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளான தடாகம், சின்ன தடாகம், சோமையாம் பாளையம், எண் 24 .விரபாண்டி போன்ற ஊர்களில் அதிகளவு செங்கல் சூளைகள் இயங்கி வருகின்றன. தமிழக தொழிலாளர்கள் மட்டும் இல்லாமல் வடமாநில தொழிலாளர்களும் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று இரவு ARS சேம்பரில் வேலை பார்க்கும் அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த சரிதுல் இஸ்லாம் (20) என்பவர் பாத்ரூம் செல்வதற்காக காட்டுப்பக்கம் சென்றுள்ளார்.
அப்போது, வனப்பகுதியில் இருந்த ஒற்றை காட்டு யானை தாக்கியதில் இடது முழங்காலுக்கு கீழே எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இது குறித்து உடனடியாக 108 ஆம்புலன்ஸ் தகவல் தெரிவிக்கப்பட்டு முதலுதவி அளித்தனர். மேலும், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.