கோவை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக தமிழகம் முழுவதும், புதிய வேளாண் சட்ட மசோதாவை எதிர்த்து மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது.
கோவை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக தமிழகம் முழுவதும், புதிய வேளாண் சட்ட மசோதாவை எதிர்த்து மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம், வேளாண் பல்கலை, மதுக்கரை வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக மறியல் போராட்டத்தில் நடைபெற்றது.
இந்த சட்டத்தால், விவசாயிகள் பல்வேறு வகையில் பாதிக்கப்படுவார்கள், குறிப்பாக கார்ப்பரேட்டுகள் கையில் சிக்கி விவசாயிகள் அழியும் நிலை உருவாகும், என்று அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பினர், திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இன்று, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக கோவையில் நடைபெற்ற போராட்டத்தில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டம் விவசாயிகளின் வாழ்வையும், எதிர்காலத்தையும் கேள்விக்குறியாகியுள்ளது எனவும், விவசாயிக்குக் கிடைக்க வேண்டிய குறைந்த பட்ச ஆதார விலைக்கும் கேடு ஏற்படுத்தப்படுவதாக குற்றம் சாட்டி, மத்திய அரசை கண்டித்தும் அதற்கு துணை போகும், மாநில அரசை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர்.