வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறையில் அகில இந்திய அண்ணா திமுக வின் இளைஞர் இளம்பெண்கள் பாசறை ஆலோசனை கூட்டம், வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு தலைமையில் இன்று நடைபெற்றது.
வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறையில் அகில இந்திய அண்ணா திமுக வின் இளைஞர் இளம்பெண்கள் பாசறை ஆலோசனை கூட்டம், வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு தலைமையில் இன்று நடைபெற்றது.

கோவை மாவட்ட செயலாளரும், உள்ளாட்சி துறை அமைச்சருமான எஸ் பி வேலுமணி அவர்களின் ஆலோசனையின்படி, தனியார் மண்டபத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் வரும் 2021 ஆம் ஆண்டு நடைபெற உள்ள, சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவின் வெற்றிக்கு முழுமையாக பாடுபடவேண்டும், இளைஞர் இளம்பெண்கள் பாசறையில் அதிகப்படியான உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
அப்போது, கட்சியின் வெற்றிக்கு முழுமையாக ஒற்றுமையாக பாடுபட வேண்டும், உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில், வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு, வால்பாறை நகரச் செயலாளர் மயில் கணேசன் மாவட்ட சிறுபான்மை செயலாளர் வால்பாறை வீ.அமீது, வாசு விஜயகுமார் பொன் கணேஷ் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள், இளம் பெண்கள் கலந்து கொண்டனர்.

கோவை மாவட்ட செயலாளரும், உள்ளாட்சி துறை அமைச்சருமான எஸ் பி வேலுமணி அவர்களின் ஆலோசனையின்படி, தனியார் மண்டபத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் வரும் 2021 ஆம் ஆண்டு நடைபெற உள்ள, சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவின் வெற்றிக்கு முழுமையாக பாடுபடவேண்டும், இளைஞர் இளம்பெண்கள் பாசறையில் அதிகப்படியான உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
அப்போது, கட்சியின் வெற்றிக்கு முழுமையாக ஒற்றுமையாக பாடுபட வேண்டும், உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில், வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு, வால்பாறை நகரச் செயலாளர் மயில் கணேசன் மாவட்ட சிறுபான்மை செயலாளர் வால்பாறை வீ.அமீது, வாசு விஜயகுமார் பொன் கணேஷ் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள், இளம் பெண்கள் கலந்து கொண்டனர்.