கோவை: கோவை- திருச்சி சாலையில் மேம்பால பணிகள் நடைபெறும் இடங்களில் தெருவிளக்குகள் இல்லாத காரணத்தினால், இரவு நேரங்களில் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, மேம்பால பணிகள் நடைபெறும் இடங்களில் தெருவிளக்குகள் அமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை: கோவை- திருச்சி சாலையில் மேம்பால பணிகள் நடைபெறும் இடங்களில் தெருவிளக்குகள் இல்லாத காரணத்தினால், இரவு நேரங்களில் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, மேம்பால பணிகள் நடைபெறும் இடங்களில் தெருவிளக்குகள் அமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை-திருச்சி சாலையில் கோவை அரசு மருத்துவமனை அருகே சுங்கம், ராமநாதபுரம், சிங்காநல்லூர் ஆகிய பகுதிகளில் சிக்னல்கள் உள்ளன. தினமும் பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் இச்சாலையில் செல்கிறது. குறிப்பாக, காலை மற்றும் மாலை நேரத்தில் கடும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
எனவே, இங்கு மேம்பாலம் அமைக்க வேண்டும் என மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை அடுத்து திருச்சி சாலையில், ரூ.253 கோடியில் மேம்பாலம் அமைக்க கடந்த வருடம் அடிக்கல் நாட்டப்பட்டது.
கோவை திருச்சி சாலையில் உள்ள நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் அருகில் இருந்து ராமநாதபுரத்தில் உள்ள பங்கு சந்தை அலுவலகம் அருகே வரை இந்த மேம்பாலம் அமைக்கப்படுகிறது. 3.1 கி.மீ தூரத்துக்கு 112 தூண்களுடன் மேம்பாலம் அமைக்கப்படுகிறது. ராமநாதபுரத்தில் இருந்து உக்கடத்துக்கு செல்லும் வாகனங்கள் இறங்குவதற்கு வசதியாக சுங்கத்தில் 400 மீட்டர் தூரத்துக்கு 8 தூண்களுடன் பாலம் அமைக்கப்படுகிறது.
திருச்சி சாலை மேம்பால பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், மேம்பால பணிகளுக்காக தெரு விளக்குகள் அகற்றப்பட்டன. ஆனால், அதன் பின் அதற்கு மாற்றாக அங்கு இன்னமும் விளக்குகள் எதுவும் அமைக்கப்படவில்லை. இதனால், இரவு நேரங்களில் வாகன ஒட்டிகள் மிகுந்த அவதியடைந்து வருகின்றனர்.

தென் மாவட்டங்களில் இருந்து வருவோர் மாநகர் பகுதிக்கு வருவதற்கு இச்சாலை வழியாக வரவேண்டியுள்ளதால், மக்கள் மிகுந்த அவதியடைந்து வருகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘திருச்சி சாலையில் மேம்பால பணிகளுக்காக தெரு விளக்குகள் அகற்றப்பட்டன. ஆனால், அதற்கு மாற்றாக தெரு விளக்குகள் அமைக்கப்படவில்லை. இதனால், இரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் செல்வோர் மிகுந்த அவதியடைந்து வருகின்றனர். இரவு நேர விபத்தும் அதிகரித்து வருகிறது,’’ என்றனர்.

கோவை-திருச்சி சாலையில் கோவை அரசு மருத்துவமனை அருகே சுங்கம், ராமநாதபுரம், சிங்காநல்லூர் ஆகிய பகுதிகளில் சிக்னல்கள் உள்ளன. தினமும் பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் இச்சாலையில் செல்கிறது. குறிப்பாக, காலை மற்றும் மாலை நேரத்தில் கடும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
எனவே, இங்கு மேம்பாலம் அமைக்க வேண்டும் என மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை அடுத்து திருச்சி சாலையில், ரூ.253 கோடியில் மேம்பாலம் அமைக்க கடந்த வருடம் அடிக்கல் நாட்டப்பட்டது.
கோவை திருச்சி சாலையில் உள்ள நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் அருகில் இருந்து ராமநாதபுரத்தில் உள்ள பங்கு சந்தை அலுவலகம் அருகே வரை இந்த மேம்பாலம் அமைக்கப்படுகிறது. 3.1 கி.மீ தூரத்துக்கு 112 தூண்களுடன் மேம்பாலம் அமைக்கப்படுகிறது. ராமநாதபுரத்தில் இருந்து உக்கடத்துக்கு செல்லும் வாகனங்கள் இறங்குவதற்கு வசதியாக சுங்கத்தில் 400 மீட்டர் தூரத்துக்கு 8 தூண்களுடன் பாலம் அமைக்கப்படுகிறது.
திருச்சி சாலை மேம்பால பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், மேம்பால பணிகளுக்காக தெரு விளக்குகள் அகற்றப்பட்டன. ஆனால், அதன் பின் அதற்கு மாற்றாக அங்கு இன்னமும் விளக்குகள் எதுவும் அமைக்கப்படவில்லை. இதனால், இரவு நேரங்களில் வாகன ஒட்டிகள் மிகுந்த அவதியடைந்து வருகின்றனர்.

தென் மாவட்டங்களில் இருந்து வருவோர் மாநகர் பகுதிக்கு வருவதற்கு இச்சாலை வழியாக வரவேண்டியுள்ளதால், மக்கள் மிகுந்த அவதியடைந்து வருகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘திருச்சி சாலையில் மேம்பால பணிகளுக்காக தெரு விளக்குகள் அகற்றப்பட்டன. ஆனால், அதற்கு மாற்றாக தெரு விளக்குகள் அமைக்கப்படவில்லை. இதனால், இரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் செல்வோர் மிகுந்த அவதியடைந்து வருகின்றனர். இரவு நேர விபத்தும் அதிகரித்து வருகிறது,’’ என்றனர்.