கோத்தகிரியில் பச்சை தேயிலையை கொள்முதல் செய்யாததை கண்டித்து நாக்குபெட்டா விவசாயிகள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

நீலகிரி: கோத்தகிரியில் தேயிலை விவசாயிகளிடம் இருந்து கடந்த 10 நாட்களாக பச்சை தேயிலையினை கொள்முதல் செய்யாததை கண்டித்து நாக்குபெட்டா விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


நீலகிரி: கோத்தகிரியில் தேயிலை விவசாயிகளிடம் இருந்து கடந்த 10 நாட்களாக பச்சை தேயிலையினை கொள்முதல் செய்யாததை கண்டித்து நாக்குபெட்டா விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோத்தகிரி பகுதியில் உள்ள 20க்கும் மேற்பட்ட தேயிலை தொழிற்சாலைகள் விவசாயிகளிடம் இருந்து பசுந்தேயிலை கொள்முதல் செய்வதை நிறுத்தியுள்ளன. பச்சை தேயிலைக்கு ஒரு கிலோவிற்கு 30 ரூபாய் 03 பைசா வழங்க தேயிலை வாரியம் உத்தரவிட்டிருந்தது.

ஆனால், சிலர் வழங்கும் தரமில்லாத தேயிலைக்கு இந்த விலை வழங்க முடியாததால் தேயிலை தொழிற்சாலைகள் பச்சை தேயிலையினை வாங்க மறுப்பு தெரிவித்தன.



இதன் காரணமாக தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி, இதில் தேயிலை வாரியம் உடனடியாக தலையிட்டு பச்சை தேயிலையினை கொள்முதல் செய்ய தொழிற்சாலைகளை வலியுறுத்த வேண்டும் என்று இந்த ஆர்ப்பாட்டத்தின் போது வலியுறுத்தப்பட்டது.

மேலும், விவசாயிகள் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படாவிட்டால் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என்று தெரிவித்தனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு ஆனைக்கட்டியில...

கோவை கவுண்டம்பாளையத்தில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம் - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கவுண்டம்பாளையம் ஜீவா நகரில் 110 ஏக்கரில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் மா...

புதுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் ஐரோப்பாவை அசத்திய குமரகுரு மாணவர்கள்; 3 விருதுகள் வென்று சாதனை..!

இங்கிலாந்து, மொனாக்கோ மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை போட்டிகளில், கோவை குமரகுர...

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளுக்கு மின்தடை

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் ஜூலை 14 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும்....

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 13 பகுதிகளில் மின்தடை

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இ...

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) மின் பராமரிப்பு: 11 பகுதிகளில் மின்தடை

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை ஜூலை 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் ந...