கோவையில் கொரோனா நோய் எதிர்ப்பு சத்து மாத்திரை தொகுப்பை நியாய விலைக்கடை அலுவலர்கள் மூலம் வழங்க வேண்டும் - நா.கார்த்திக் எம்எல்ஏ வலியுறுத்தல்

கோவை: கோவையில் கொரோனா தொற்றுக்கு வழங்கப்படும் நோய் எதிர்ப்பு சத்து மாத்திரைகள் தொகுப்பு விநியோகத்தை அதிமுகவினர் மூலம் விநியோகிக்காமல் நியாய விலைக்கடை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட வேண்டும் என நா.கார்த்திக் எம்எல்ஏ வலியுறுத்தியுள்ளார்.


கோவை: கோவையில் சுகாதார துறை சார்பில் கூட்டுறவு துறை மூலமாக நியாய விலைக்கடைகளில் கொரோனா தொற்று தடுப்புக்கு வழங்கப்படும் நோய் எதிர்ப்பு சத்து மாத்திரைகள் தொகுப்பு விநியோகத்தை அதிமுகவினர் மூலம் விநியோகிக்காமல் நியாய விலைக்கடை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட வேண்டும் என நா.கார்த்திக் எம்எல்ஏ வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக கோவை மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்எல்ஏ வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில்,

கோவையில் தற்பொழுது கொரோனா வைரஸ் தாக்குதல் தீவிரமடைந்து பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கிறது. இது சம்பந்தமாக கோவையில் சுகாதாரத்துறை சார்பில் கூட்டுறவு துறை மூலமாக, அனைத்து நியாய விலைக்கடைகளிலும், கொரோனா தொற்று தடுப்புக்கு நோய் எதிர்ப்பு சத்து மாத்திரைகள் தொகுப்பு விநியோகம் செய்யப்படுகிறது.

தற்பொழுது கோவை மாவட்டம் முழுவதும், அதிமுகவினர் தங்கள் பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளுக்கு சென்று, இந்த தொகுப்பு மாத்திரைகள் விநியோகத்தை, சம்பந்தப்பட்ட நியாய விலைக்கடை அலுவலர்கள் மூலம் வழங்காமல், சுகாதார துறை சார்பில் கூட்டுறவு துறை மூலமாக வழங்கப்பட்ட மாத்திரைகளை அதிமுகவினரே தங்கள் சொந்த பணத்தில் வழங்குவது போல வழங்கி நாடகமாடி வருகின்றனர்.

எந்தெந்த நடவடிக்கைகளில் அரசியல் செய்வது என்பதெல்லாம் இல்லாமல், இந்த மருந்து மாத்திரைகள் விநியோகத்தில் கூட, அதிமுக சார்பில் உள்ளவர்களை வைத்து செயல்படுத்தி, இந்த பேரிடர் காலத்திலும், ஆளும் அ.தி.மு.க அரசியல் செய்கிறது. இந்த செயலை கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் மிகவும் வன்மையாக கண்டிக்கிறேன்.

மக்களுக்கு நிவாரண உதவியாக அரசு கொடுப்பது, மக்களின் வரிப்பணம். இது ஏதோ அ.தி.மு.க.வினர், ஓட்டு வாங்க ஓட்டுக்கு பணம் கொடுத்தது போல் களத்தில் இறங்கி, சுகாதாரத்துறை சார்பில் கூட்டுறவு துறை மூலமாக வழங்கப்பட்ட மாத்திரைகளை மக்களுக்கு கொடுத்து வருகின்றனர்.

கோவையில் உள்ள கொரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதிகள் இல்லாததால், கொரோனா தொற்று நோயாளிகள் சிகிச்சை பெறக்கூட முடியாமல் அல்லாடி வருகின்றனர். இதற்கெல்லாம் நடவடிக்கை எடுத்து உதவ முடியாத, கையாலாகாத அதிமுக அரசின் நிர்வாக சீர்கேடுகளை, மக்கள் கவனித்துக் கொண்டுதான் உள்ளனர். விரைவில் மக்கள் அதிமுக அரசுக்கு தக்க பாடம் புகட்டுவார்கள்.

ஆகவே, கோவையில் சுகாதார துறை சார்பில் கூட்டுறவு துறை மூலமாக நியாய விலைக்கடைகளில் கொரோனா தொற்று தடுப்புக்கு வழங்கப்படும் மாத்திரைகள் விநியோகம், ஆளுங்கட்சியான அதிமுகவினர் மூலமாக விநியோகிக்காமல், நியாய விலைக்கடை அலுவலர்கள் மூலம் விநியோகிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன், இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு ஆனைக்கட்டியில...

கோவை கவுண்டம்பாளையத்தில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம் - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கவுண்டம்பாளையம் ஜீவா நகரில் 110 ஏக்கரில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் மா...

புதுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் ஐரோப்பாவை அசத்திய குமரகுரு மாணவர்கள்; 3 விருதுகள் வென்று சாதனை..!

இங்கிலாந்து, மொனாக்கோ மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை போட்டிகளில், கோவை குமரகுர...

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளுக்கு மின்தடை

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் ஜூலை 14 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும்....

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 13 பகுதிகளில் மின்தடை

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இ...

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) மின் பராமரிப்பு: 11 பகுதிகளில் மின்தடை

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை ஜூலை 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் ந...