கோவை: திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 36 வயது கர்ப்பிணி பெண் கொரோனா நோய்த் தொற்று காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன் இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கோவை: திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 36 வயது கர்ப்பிணி பெண் கொரோனா நோய்த் தொற்று காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன் இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு அங்கு மேற்கொள்ளப்பட்ட, ஸ்கேனில் கர்ப்பப்பையில் 25×27 செண்டி மீட்டர் அளவில் பெரிய கட்டி இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து, குழந்தையின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, அந்த கர்ப்பிணி பெண்ணுக்கு, அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது.
இது குறித்து இ.எஸ்.ஐ. மருத்துவமனை டீன் நிர்மலா கூறுகையில், "கர்ப்பப்பையில் இது போன்ற கட்டிகள் இருக்கும் போது கரு உருவாகாது. ஆனால், இந்த பெண்ணுக்கு கரு உருவாகி, குழந்தையும் ஆரோக்கியமாக வளர்ந்துள்ளது. இது போன்ற கட்டியால், பிரசவ நேரத்தில் பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது."
"இந்த நிலையில், குழந்தையின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, மகப்பேறு மருத்துவர், கீதா தலைமையில் பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டு, குழந்தை பத்திரமாக வெளியே எடுக்கப்பட்டது. குழந்தை 2.8 கிலோ எடையுடன் ஆரோக்கியமாக இருந்தது. இந்த சிக்கலான அறுவை சிகிச்சையை மருத்துவர்கள் வெற்றிகரமாக செய்துள்ளனர்," என்றார்.