கோவையில் சமூக இடைவெளியினை கடைபிடிக்காத நிறுவனங்கள்‌ மற்றும்‌ கடைகளுக்கு சீல்‌ வைக்கப்படும் - மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை!

கோவை: கோவை மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலக கூட்டரங்கில்‌ கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள்‌ குறித்து அனைத்து மண்டல அலுவலர்களுடனான ஆய்வுக்‌ கூட்டம்‌ மாநகராட்சி ஆணையாளா்‌ மற்றும்‌ தனி அலுவலா்‌ பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ இ.ஆ.ப., அவர்கள்‌ தலைமையில்‌ இன்று நடைபெற்றது.


கோவை: கோவை மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலக கூட்டரங்கில்‌ கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள்‌ குறித்து அனைத்து மண்டல அலுவலர்களுடனான ஆய்வுக்‌ கூட்டம்‌ மாநகராட்சி ஆணையாளா்‌ மற்றும்‌ தனி அலுவலா்‌ பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ இ.ஆ.ப., அவர்கள்‌ தலைமையில்‌ இன்று நடைபெற்றது.

இந்த ஆய்வுக்‌ கூட்டத்தில்‌ மாநகராட்சி ஆணையர் அவர்கள்‌ தெரிவித்ததாவது:

கோவை மாநகராட்சியில்‌ கொரோனா தொற்று பரவுதலை தடுக்கும்‌ விதமாக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும்‌, தொற்று பரவுதலை தடுப்பதற்காக மாநகராட்சியில்‌ உள்ள அனைத்து மண்டலங்களிலும்‌ தொடர்ந்து மருத்துவ முகாம்கள்‌ மற்றும்‌ வீடு வீடாகச்‌ சென்று சளி, இருமல்‌, காய்ச்சல்‌ உள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

ஒரு வார்டில்‌ மருத்துவ முகாம்‌ நடைபெறும்போது ஒரு வாரம்‌ கழித்து மீண்டும்‌ அதே இடத்தில்‌ மருத்துவ முகாம்‌ நடைபெற வேண்டும்‌. அப்பகுதியில்‌ கொரோனா தொற்று பாதித்தவர்களின்‌ விபரங்களை சேகரிக்கப்‌பட வேண்டும்‌. பொதுமக்கள்‌ அதிகம்‌ கூடும்‌ இடங்களான இரயில்‌ நிலையம்‌, பேருந்து நிலையம்‌, மார்க்கெட்‌, வெளியூர்‌ செல்லும்‌ பேருந்து நிலையங்கள்‌ ஆகிய இடங்களில்‌ மருத்துவ முகாம்கள்‌ நடைபெற வேண்டும்‌. பேருந்துகளில்‌ ஓட்டுநர்‌, நடத்துநர்‌, பயணிகள்‌ அனைவரும்‌ முகக்கவசம்‌ அணிந்திருக்க வேண்டும்‌. இவற்றை பின்பற்றாதவர்களுக்கு அபராதம்‌ விதிக்கப்படும்‌ என்றார்.

அதேபோல உணவகங்கள்‌, வணிக வளாகங்கள்‌, பேக்கரிகள்‌, மளிகைக்கடைகள்‌ ஆகியவற்றில்‌ பணிபுரிபவர்கள்‌ கட்டாயம்‌ முகக்கவசம்‌ அணிந்து சமூக இடைவெளியினை பின்பற்ற வேண்டும்‌. வாடிக்கையாளர்களிடம்‌ இவற்றை கட்டாயம்‌ பின்பற்ற வேண்டும்‌ என தெரிவிக்க வேண்டும்‌. இவற்றை கடைபிடிக்காத கடைகளுக்கு சீல்‌ வைக்கப்படும்‌. மத்திய சிறைச்சாலையில்‌ உள்ள கைதிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்திட வேண்டும்‌. புதிதாக சிறைக்கு உள்ளே வரும்‌ கைதிகளை 14 நாட்கள்‌ தனிமைப்படுத்திக்‌ கொள்ள வேண்டும்‌ என்பதை எடுத்துரைக்க வேண்டும்‌ .

மேலும்‌, மருத்துவமனைகளில்‌ வென்டிலேட்டர் வசதி இருப்பதை உறுதிப்படுத்திட வேண்டும்‌. கொரோனா தொற்று இல்லாத மாநகராட்சியாக திகழ்ந்திட அனைவரும்‌ முகக்கவசம்‌ அணிந்து, சமூக இடைவெளியினை கடைபிடித்து கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்திட பொதுமக்கள்‌ முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும்‌ என மாநகராட்சி ஆணையாளர் மற்றும்‌ தனி அலுவலர்‌ பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ இ.ஆ.ப., அவர்கள்‌ தெரிவித்தார்.

இக்கூட்டத்தில்‌ மாநகராட்சி துணை ஆணையாளர்‌ எஸ்‌.மதுராந்தகி, மாநகரப்பொறியாளா்‌ ஆ.லட்சுமணன்‌, மண்டல உதவி ஆணையார்கள்‌

செந்தல்குமார்‌ ரத்தினம்‌ (வடக்கு), தி.ரா.ரவி (தெற்கு), அ.ஜெ.செந்தில்‌அரசன்‌ (மேற்கு), எம்‌.முருகன்‌(கிழக்கு), செயற்பொறியாளா்‌ ஞானவேல்‌, உதவி நிர்வாக பொறியாளர்கள்‌, உதவி பொறியாளா்கள்‌, அனைத்து மண்டல சுகாதார அலுவலா்கள்‌, சுகாதார ஆய்வாளர்கள்‌ மற்றும்‌ தொடர்புடைய அலுவலா்கள்‌ கலந்து கொண்டனா்‌.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு ஆனைக்கட்டியில...

கோவை கவுண்டம்பாளையத்தில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம் - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கவுண்டம்பாளையம் ஜீவா நகரில் 110 ஏக்கரில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் மா...

புதுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் ஐரோப்பாவை அசத்திய குமரகுரு மாணவர்கள்; 3 விருதுகள் வென்று சாதனை..!

இங்கிலாந்து, மொனாக்கோ மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை போட்டிகளில், கோவை குமரகுர...

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளுக்கு மின்தடை

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் ஜூலை 14 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும்....

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 13 பகுதிகளில் மின்தடை

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இ...

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) மின் பராமரிப்பு: 11 பகுதிகளில் மின்தடை

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை ஜூலை 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் ந...