நீலகிரி: உதகை அரசு தாவரவியல் பூங்காவில் வார விடுமுறையான இன்று சுற்றுலாப் பயணிகள் வரத்து குறைவால் பூங்கா வெறிச்சோடி காணப்பட்டது.
நீலகிரி: உதகை அரசு தாவரவியல் பூங்காவில் வார விடுமுறையான இன்று சுற்றுலாப் பயணிகள் வரத்து குறைவால் பூங்கா வெறிச்சோடி காணப்பட்டது.
மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதங்களில் இரண்டாம் சீசன் நிலவுவது வழக்கம். இச்சமயங்களில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்வர்.

இந்நிலையில், கொரோனா தொற்று காரணமாக தோட்டக்கலைத் துறை கட்டுப்பாட்டில் உள்ள உதகை அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா, கோத்தகிரி நேரு பூங்கா ஆகியவை மட்டும் திறக்கப்பட்டு சுற்றுலா பயணிகள் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியுடன் பூங்காவை சுற்றி பார்க்க பூங்கா ஊழியர்கள் அனுமதித்து வருகின்றனர்.
இதனிடையே, வார விடுமுறையான இன்று உதகையில் குளிரான இதமான காலநிலை நிலவியும், மிக குறைந்த அளவே சுற்றுலாப் பயணிகள் வந்து சென்றனர்.

இதன் காரணமாக பெரும்பாலான பூங்காக்கள் வெறிச்சோடி காணப்பட்டன. சுற்றுலாத் தொழிலை நம்பியிருந்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதங்களில் இரண்டாம் சீசன் நிலவுவது வழக்கம். இச்சமயங்களில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்வர்.
இந்நிலையில், கொரோனா தொற்று காரணமாக தோட்டக்கலைத் துறை கட்டுப்பாட்டில் உள்ள உதகை அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா, கோத்தகிரி நேரு பூங்கா ஆகியவை மட்டும் திறக்கப்பட்டு சுற்றுலா பயணிகள் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியுடன் பூங்காவை சுற்றி பார்க்க பூங்கா ஊழியர்கள் அனுமதித்து வருகின்றனர்.
இதனிடையே, வார விடுமுறையான இன்று உதகையில் குளிரான இதமான காலநிலை நிலவியும், மிக குறைந்த அளவே சுற்றுலாப் பயணிகள் வந்து சென்றனர்.
இதன் காரணமாக பெரும்பாலான பூங்காக்கள் வெறிச்சோடி காணப்பட்டன. சுற்றுலாத் தொழிலை நம்பியிருந்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.