கோவை: கோவை சிறுவாணி அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது பெய்து வரும் மழை காரணமாக அணையின் நீர்மட்டம் 44.08 அடியாக உயர்ந்துள்ளது.
கோவை: கோவை சிறுவாணி அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது பெய்து வரும் மழை காரணமாக அணையின் நீர்மட்டம் 44.08 அடியாக உயர்ந்துள்ளது.
கோவை மக்களின் முக்கிய நீர் ஆதரமாக சிறுவாணி நீர் கருதப்படுகிறது. கோவை மாநகராட்சிக்குட்பட்ட 36 வார்டுகளுக்கும் நுாற்றுக்கணக்கான வழியோர கிராமங்களுக்கும், சிறுவாணி அணை நீர் குடிநீராக விநியோகம் செய்யப்படுகிறது.
சிறுவாணி அணையில் 22.47 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிற்கு நீரை தேக்க முடியும். 49.53 அடி உயரம் கொண்ட இந்த அணை கடல் மட்டத்தில் இருந்து 878.5 மீட்டர் உயரமுள்ளது. 650 மில்லியன் கன அடி நீர் கொள்ளவு கொண்டது.
சிறுவாணி அணை பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக அணையின் நீர்மட்டம் 44.08 அடியாக உயர்ந்துள்ளது.
இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், "சிறுவாணி அணை பகுதியில் இருந்து 96 எம்.எல்.டி நீர் குடிநீருக்காக எடுக்கப்படுகிறது," என்றார்.
கோவை மக்களின் முக்கிய நீர் ஆதரமாக சிறுவாணி நீர் கருதப்படுகிறது. கோவை மாநகராட்சிக்குட்பட்ட 36 வார்டுகளுக்கும் நுாற்றுக்கணக்கான வழியோர கிராமங்களுக்கும், சிறுவாணி அணை நீர் குடிநீராக விநியோகம் செய்யப்படுகிறது.
சிறுவாணி அணையில் 22.47 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிற்கு நீரை தேக்க முடியும். 49.53 அடி உயரம் கொண்ட இந்த அணை கடல் மட்டத்தில் இருந்து 878.5 மீட்டர் உயரமுள்ளது. 650 மில்லியன் கன அடி நீர் கொள்ளவு கொண்டது.
சிறுவாணி அணை பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக அணையின் நீர்மட்டம் 44.08 அடியாக உயர்ந்துள்ளது.
இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், "சிறுவாணி அணை பகுதியில் இருந்து 96 எம்.எல்.டி நீர் குடிநீருக்காக எடுக்கப்படுகிறது," என்றார்.