உதகையில் பேரிடர் காலத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தீயணைப்புத் துறையினர் ஒத்திகை

நீலகிரி: நீலகிரி மாவட்டம் பருவ மழைக்காலத்தில் ஏற்படும் வெள்ளப் பெருக்கின் போது தீயணைப்புத்துறையினர், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.


நீலகிரி: நீலகிரி மாவட்டம் பருவ மழைக்காலத்தில் ஏற்படும் வெள்ளப் பெருக்கின் போது தீயணைப்புத்துறையினர், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

நீலகிரி மாவட்டத்தில் பருவ மழைக்காலங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளதால்,, அந்த காலகட்டத்தில் பொதுமக்களை எவ்வாறு காப்பாற்றலாம், என்பது குறித்த ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் தீ அணைப்பு நிலைய அலுவலர், மோகன் தலைமையில் பருவ மழையில் பாதிக்கப்படும் மக்களை எவ்வாறு காப்பாற்றுவது குறித்த ஒத்திகை நடைப்பெற்றது. அப்போது காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய ஒருவரை தீயணைப்பு வீரர்கள் மீட்டு வந்தனர்.



ஒத்திகையை உண்மை, என நம்பிய இப்பகுதி மக்கள் குழப்பமடைந்தனர். அங்கு, கூட்டம் சேர்ந்ததால் சிறிது பரப்பரப்பு ஏற்பட்டது.



பின்னர், ஒத்திகை நிகழ்ச்சி என்று தீயணைப்பு அதிகாரிகள் எடுத்துரைத்த பின்பு, மக்கள் நிம்மதி அடைந்தனர். இந்த ஒத்திகை நிகழ்சியில், காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லும் வாலிபரை பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வருவதை தியணைப்புத்துறையினர் தத்ரூபமாக செய்து காண்பித்தனர்.

இதில், கோட்டாட்சியர் ரஞ்சித் சிங், தீயணைப்பு அலுவலர்கள் முரளி, கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு ஆனைக்கட்டியில...

கோவை கவுண்டம்பாளையத்தில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம் - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கவுண்டம்பாளையம் ஜீவா நகரில் 110 ஏக்கரில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் மா...

புதுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் ஐரோப்பாவை அசத்திய குமரகுரு மாணவர்கள்; 3 விருதுகள் வென்று சாதனை..!

இங்கிலாந்து, மொனாக்கோ மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை போட்டிகளில், கோவை குமரகுர...

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளுக்கு மின்தடை

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் ஜூலை 14 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும்....

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 13 பகுதிகளில் மின்தடை

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இ...

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) மின் பராமரிப்பு: 11 பகுதிகளில் மின்தடை

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை ஜூலை 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் ந...