பொள்ளாச்சியில் நகராட்சி சுகாதாரத்துறை ஆய்வாளர்கள் திடீர் சோதனை..! 115 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

கோவை: பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 50 மைக்ரானுக்கு குறைவாக உள்ள பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்ட பொருட்கள் பயன்படுத்த மற்றும் விற்பனை செய்ய தடை செய்யப்பட்டுள்ளது.


கோவை: பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 50 மைக்ரானுக்கு குறைவாக உள்ள பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்ட பொருட்கள் பயன்படுத்த மற்றும் விற்பனை செய்ய தடை செய்யப்பட்டுள்ளது.

ஆனால், கடந்த சில மாதங்களாக நகர் பகுதியில் உள்ள கடைகளில் 50 மைக்ரானுக்கும் குறைவான பிளாஸ்டிக் பயன்பாடு என்பது மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளதாக புகார் எழுந்துள்ளது.



இதையடுத்து, நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் தர்மராஜ், செல்வம், செந்தில்குமார் உள்ளிட்டோர், கடைவீதி மற்றும் இமாம்கான்வீதி, எஸ்.எஸ்.கோவில் வீதி உள்ளிட்ட பல இடங்களில் செயல்பட்டு வரும் வணிக நிறுவனங்களில் கடைகள் ஆகியவற்றில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, 15க்கும் மேற்பட்ட கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட 50 மைக்ரானுக்கும் குறைவான பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டிற்கு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அங்கிருந்த சுமார் 115 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், அவற்றின் அளவுக்கேற்ப அபராதம் என மொத்தம் ரூ.4500 அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும், பறிமுதல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள், நகராட்சி குப்பை கிடங்கில் கொட்டி அழிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து, பொள்ளாச்சி நகர்ப்பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு இருப்பின் அவற்றை பறிமுதல் செய்வதோடு, கடுமையான அபராதம் விதிக்கப்படும் என்றும், நகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு ஆனைக்கட்டியில...

கோவை கவுண்டம்பாளையத்தில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம் - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கவுண்டம்பாளையம் ஜீவா நகரில் 110 ஏக்கரில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் மா...

புதுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் ஐரோப்பாவை அசத்திய குமரகுரு மாணவர்கள்; 3 விருதுகள் வென்று சாதனை..!

இங்கிலாந்து, மொனாக்கோ மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை போட்டிகளில், கோவை குமரகுர...

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளுக்கு மின்தடை

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் ஜூலை 14 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும்....