கோவையில் 5 லட்சம் திருத்தியமைக்கப்பட்ட புதிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல்!

கோவை: கோவை கோட்டைப்புதூர், காந்திநகர் பகுதிகளில் புதிய தார்ச்சாலைகள் அமைக்கும் பணிகளை நா. கார்த்திக் எம்.எல்.ஏ நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


கோவை: கோவை மாவட்டத்தில் இதுவரை சுமார் 5 லட்சம் வாக்காளர்களுக்கு திருத்தியமைக்கப்பட்ட புதிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

கோவை மாவட்டத்தில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் மாவட்ட நிர்வாகம் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் அடிப்படையில் மாவட்டத்தில் 29 லட்சத்து 23 ஆயிரத்து 837 வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர் அடையாள அட்டையில் ஒரு எண் குறிப்பிடப்பட்டிருக்கும். ஒவ்வொரு காலகட்டத்திலும் கொடுக்கப்பட்டுள்ள வாக்காளர் அடையாள அட்டைகளில் அடையாள எண் ஒவ்வொரு விதமாக குறிப்பிடப்பட்டிருந்தன.

இந்நிலையில், அனைத்து வாக்காளர் அடையாள அட்டைகளிலும் ஒரே விதமாக எண் இருக்கும் வகையில் திருத்தியமைக்கப்பட்ட புதிய வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இதில், கோவை மாவட்டத்தில் 5.20 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

இது குறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறுகையில், "ஆரம்பத்தில் கொடுக்கப்பட்ட வாக்காளர் அட்டைகளில் டின் என்று ஆரம்பித்து அதனுடன் 8 இலக்க எண்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. அதன்பின் வழங்கப்பட்ட வாக்காளர் அட்டைகளில் 3 ஆங்கில எழுத்துக்கள் மற்றும் 8 இலக்க ண்கள் கொடுக்கப்பட்டிருந்தன. கடந்த 5 ஆண்டுகளாக 3 ஆங்கில எழுத்துக்கள் மற்றும் 7 இலக்க எண்களுடன் கொடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், அனைத்து அட்டைகளிலும் வாக்காளர் அடையாள அட்டை எண் ஒரே மாதிரியாக இருக்கும் வகையில், 3 ஆங்கில எழுத்துக்கள் மற்றும் 7 இலக்க எண்களுடன் கூடிய திருத்தியமைக்கப்பட்ட வாக்காளர் அடையாள அட்டை வழங்க திட்டமிடப்பட்டது. அதன்படி கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளிலும் பழைய முறையில் அடையாள எண் கொண்ட 5 லட்சம் வாக்காளர்களுக்கு இதுவரை திருத்தியமைக்கப்பட்ட புதிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளன. குழப்பம் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் புதிய எண்ணுடன், பழைய எண்ணும் சேர்த்து குறிப்பிடப்பட்டுள்ளது," என்று தெரிவித்தனர்.

Newsletter

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு ஆனைக்கட்டியில...

கோவை கவுண்டம்பாளையத்தில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம் - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கவுண்டம்பாளையம் ஜீவா நகரில் 110 ஏக்கரில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் மா...

புதுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் ஐரோப்பாவை அசத்திய குமரகுரு மாணவர்கள்; 3 விருதுகள் வென்று சாதனை..!

இங்கிலாந்து, மொனாக்கோ மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை போட்டிகளில், கோவை குமரகுர...

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளுக்கு மின்தடை

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் ஜூலை 14 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும்....