நீலகிரி: உதகை அருகே சோலூா் பகுதியில் தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்து வந்த புதுமணத் தம்பதியினா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் தொடா்பாக கோட்டாட்சியர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
நீலகிரி: உதகை அருகே சோலூா் பகுதியில் தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்து வந்த புதுமணத் தம்பதியினா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் தொடா்பாக கோட்டாட்சியர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
உதகை அருகே மேலூா் ஒசஹட்டி பகுதியைச் சோ்ந்தவா் தயானந்தன் (31). இவரது மனைவி வினோதினி (22). இவா்களுக்கு கடந்த மே மாதத்தில்தான் திருமணம் நடைபெற்றுள்ளது. இவா்கள் இருவரும் உதகை அருகே சோலூா் பகுதியில் உள்ள ஒரு தனியாா் தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்து வந்தனா். மேலும், இவா்கள் இருவரும் அந்த தோட்ட நிறுவனத்தின் குடியிருப்பிலேயே வசித்து வந்தனா்.
இந்நிலையில், காலை தயானந்தனின் வீட்டின் கதவு திறக்கப்படாமல் இருந்ததைக் கண்டு சந்தேகமடைந்த சக ஊழியர்கள் கதவைத் தட்டியுள்ளனா். ஆனால், கதவு திறக்கப்படவில்லை. இதையடுத்து, வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, இருவரும் தூக்கிட்டு உயிரிழந்திருப்பதைக் கண்டு எஸ்டேட் நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
பின்னர் புதுமந்து காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து காவல் துறையினா் விசாரணை நடத்தினர்.

இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக உதகை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், உயிரிழந்த இருவரின் இறப்புக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை என்று காவல் துறையினா் தெரிவித்தனா். இவா்களுக்கு திருமணமாகி 6 மாதங்கள்கூட முடிவடையாததால் இது தொடா்பாக கோட்டாட்சியா் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
உதகை அருகே மேலூா் ஒசஹட்டி பகுதியைச் சோ்ந்தவா் தயானந்தன் (31). இவரது மனைவி வினோதினி (22). இவா்களுக்கு கடந்த மே மாதத்தில்தான் திருமணம் நடைபெற்றுள்ளது. இவா்கள் இருவரும் உதகை அருகே சோலூா் பகுதியில் உள்ள ஒரு தனியாா் தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்து வந்தனா். மேலும், இவா்கள் இருவரும் அந்த தோட்ட நிறுவனத்தின் குடியிருப்பிலேயே வசித்து வந்தனா்.
இந்நிலையில், காலை தயானந்தனின் வீட்டின் கதவு திறக்கப்படாமல் இருந்ததைக் கண்டு சந்தேகமடைந்த சக ஊழியர்கள் கதவைத் தட்டியுள்ளனா். ஆனால், கதவு திறக்கப்படவில்லை. இதையடுத்து, வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, இருவரும் தூக்கிட்டு உயிரிழந்திருப்பதைக் கண்டு எஸ்டேட் நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
பின்னர் புதுமந்து காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து காவல் துறையினா் விசாரணை நடத்தினர்.
இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக உதகை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், உயிரிழந்த இருவரின் இறப்புக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை என்று காவல் துறையினா் தெரிவித்தனா். இவா்களுக்கு திருமணமாகி 6 மாதங்கள்கூட முடிவடையாததால் இது தொடா்பாக கோட்டாட்சியா் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.