கோவை புலியகுளம் பகுதியில் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவியர் சேர்க்கை - அமைச்சர் எஸ்‌.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்!

கோவை: கோவை புலியகுளம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 2020 -21ம் கல்வி ஆண்டுக்கான மாணவியர் சேர்க்கையை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்‌.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்.



கோவை: கோவை புலியகுளம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 2020 -21ம் கல்வி ஆண்டுக்கான மாணவியர் சேர்க்கையை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்‌.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்.



சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் புதிதாக 7 அரசு கலைக்கல்லூரி அமைக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி தெரிவித்திருந்தார். அதன்படி அரியலூர், கரூர், விழுப்புரம், விருதுநகர், நாகப்பட்டினம், ராணிப்பேட்டை மற்றும் கோவை என ஏழு இடங்களில் புதிதாக அரசு கலைக் கல்லூரிகள் தொடங்கப்பட்டு உள்ளது‌.



இதில் கோவை புலியகுளம் பகுதியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்கப்பட்டுள்ளது.



இந்த நிலையில், இக்கல்லூரியின் 2020 - 2021ம் கல்வி ஆண்டுக்கான மாணவியர் சேர்க்கை துவக்க விழா இன்று நடைபெற்றது. இதில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்‌.பி வேலுமணி கலந்து கொண்டு மாணவியருக்கு விண்ணப்பப் படிவங்களை வழங்கி சேர்க்கையை தொடங்கி வைத்தார்.



முன்னதாக விழா மேடையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசுகையில், கோவை மாவட்டத்திற்கு பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செய்து வருகிறது. விமானநிலைய விரிவாக்கம், மெட்ரோ ரயில், பல்வேறு இடங்களில் மேம்பாலங்கள், 5 அரசு கல்லூரிகள், அத்திக்கடவு அவினாசி திட்டம், பில்லூர் மூன்றாம் கூட்டுக் குடிநீர் திட்டம் என பல்வேறு திட்டங்களை கோவை மாவட்டத்தில் இந்த அரசு செயல்படுத்தி வருகிறது.

இதன் மூலம் 50 ஆண்டுகளுக்கு குடிநீர் பிரச்சனை இருக்காது என கூறியவர், கோவை விமான நிலைய விரிவாக்கப் பணிகள் நிறைவடையும் போது, ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றார். புலியகுளம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதல்கட்டமாக 5 பாடப்பிரிவுகள் துவங்கப்பட்டுள்ளது எனவும் மாணவர் சேர்க்கை எண்ணிக்கையைப் பொருத்து கூடுதல் பாடப்பிரிவுகள் வருங்காலங்களில் துவங்கப்படும் என்றார்‌.



மேலும், தனியார் கல்லூரிகளில் 30 ஆயிரம் ரூபாய் அளவுக்கு கல்வி கட்டணம் செலுத்திப் படிக்க வேண்டிய பாடப்பிரிவுகளை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2000 ரூபாய் கட்டணத்தில் படிக்க இயலும் எனவும் அமைச்சர் எஸ்‌.பி வேலுமணி தெரிவித்தார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு ஆனைக்கட்டியில...

கோவை கவுண்டம்பாளையத்தில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம் - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கவுண்டம்பாளையம் ஜீவா நகரில் 110 ஏக்கரில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் மா...

புதுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் ஐரோப்பாவை அசத்திய குமரகுரு மாணவர்கள்; 3 விருதுகள் வென்று சாதனை..!

இங்கிலாந்து, மொனாக்கோ மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை போட்டிகளில், கோவை குமரகுர...

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளுக்கு மின்தடை

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் ஜூலை 14 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும்....

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 13 பகுதிகளில் மின்தடை

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இ...

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) மின் பராமரிப்பு: 11 பகுதிகளில் மின்தடை

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை ஜூலை 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் ந...