கோவை: பொள்ளாச்சி, உடுமலை ரோடு பி எஸ் என் எல் (BSNL) அலுவலகம் முன்பு சாலையின் நடுவே ஏற்பட்ட குழி காரணமாக ஆபத்தான நிலையில், மூன்று கம்பிகள் வெளியே நீட்டிக் கொண்டு இருந்துள்ளது.
கோவை: பொள்ளாச்சி, உடுமலை ரோடு பி எஸ் என் எல் (BSNL) அலுவலகம் முன்பு சாலையின் நடுவே ஏற்பட்ட குழி காரணமாக ஆபத்தான நிலையில், மூன்று கம்பிகள் வெளியே நீட்டிக் கொண்டு இருந்துள்ளது.
வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளுக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடிய அக்கம்பிகள் குறித்து கிடைத்த தகவலின் பேரில் இன்று (08/10/2020) பொள்ளாச்சி மேற்கு காவல் நிலைய காவலர் காளிமுத்து (PC.991) என்பவர் இரும்பு பட்டறை நடத்தி வரும் செல்வம் என்பவரின் உதவியுடன், மேற்கண்ட கம்பிகளை அகற்றி சாலையை சீரமைக்க உதவினார்.

பொதுமக்கள் பாதிக்கப்படக் கூடாது என்ற நல்லெண்ணத்தில், சாலையை சரி செய்த காவலர் மற்றும் இரும்பு பட்டறை நடத்தி வரும் செல்வம் ஆகியோர்களை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினார்கள்.