திருப்பூர்: திருப்பூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் இருந்த 75 ஆண்டுகால அரசமரம் வேருடன் பிடுங்கி வேறு இடத்தில் நடப்பட்டது.
திருப்பூர்: திருப்பூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் இருந்த 75 ஆண்டுகால அரசமரம் வேருடன் பிடுங்கி வேறு இடத்தில் நடப்பட்டது.
திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் மருத்துவக் கல்லூரி அமைப்பதற்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. மேலும் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தும் நோக்கிலும் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த பணிகளுக்காக மருத்துவமனை வளாகத்தில் சுமார் 75 ஆண்டுகள் பழமைமிக்க அரசமரத்தை வெட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த சில தினங்களாக இதற்கான பணிகள் நடைபெற்று வந்தன.
ஆனால், இவ்வளவு பழமைவாய்ந்த அரச மரத்தை வெட்டாமல் வேருடன் பிடுங்கி வேறு இடத்தில் நட திருப்பூரை சேர்ந்த ஸ்கிரீன் அண்ட் கிளீன் அமைப்பு நிர்வாகிகள் திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையின் முதல்வரிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அதனை வெட்டாமல் வேறு இடத்தில் நடுவதற்கு அனுமதி வாங்கினர்.

இதையடுத்து, 16 அடி அகலம், 85 மீட்டர் உயரம் உள்ள அந்த அரசமரத்தின் ஆணி வேர் தவிர கிளைகள், பக்கவாட்டு வேர்கள் வெட்டப்பட்டது. அவற்றில் வேர் வளர்ச்சி ஊக்க மருந்து தடவப்பட்டது. பிறகு மரத்தை தொடர்ந்து கண்காணித்து வந்தனர். ஒரு சில நாட்களுக்கு பின்னர் புதிய கிளைகள் துளிர்விடத் துவங்கின.
இந்த நிலையில், மரம் உயிருடன் இருப்பது உறுதி செய்யப்பட்ட பிறகு இன்று இரண்டு ராட்சத கிரேன்கள் மூலம் மரம் வேருடன் பிடுங்கப்பட்டது.

இதையடுத்து, ராட்சத சரக்கு லாரி உதவியுடன் சுமார் 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு, வேருடன் பிடுங்கப்பட்ட 15 டன் எடை கொண்ட அந்த அரசமரம் லாரியில் ஏற்றப்பட்டது.
பின்னர், அங்கிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காளம்பளையம் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு உள்ள ஒரு தோட்டத்தில் மறுநடவு செய்யப்பட்டது. மரம் நடவு செய்யப்படும் இடத்தில் 12 அடி ஆழத்திலும், 16 அடி அகலத்திலும் குழி தோண்டப்பட்டு, அதில் மரத்திற்கு தேவையான அனைத்து உரங்களும் இடப்பட்டு மரம் நடவு செய்யப்பட்டது.
திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் மருத்துவக் கல்லூரி அமைப்பதற்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. மேலும் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தும் நோக்கிலும் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த பணிகளுக்காக மருத்துவமனை வளாகத்தில் சுமார் 75 ஆண்டுகள் பழமைமிக்க அரசமரத்தை வெட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த சில தினங்களாக இதற்கான பணிகள் நடைபெற்று வந்தன.
ஆனால், இவ்வளவு பழமைவாய்ந்த அரச மரத்தை வெட்டாமல் வேருடன் பிடுங்கி வேறு இடத்தில் நட திருப்பூரை சேர்ந்த ஸ்கிரீன் அண்ட் கிளீன் அமைப்பு நிர்வாகிகள் திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையின் முதல்வரிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அதனை வெட்டாமல் வேறு இடத்தில் நடுவதற்கு அனுமதி வாங்கினர்.
இதையடுத்து, 16 அடி அகலம், 85 மீட்டர் உயரம் உள்ள அந்த அரசமரத்தின் ஆணி வேர் தவிர கிளைகள், பக்கவாட்டு வேர்கள் வெட்டப்பட்டது. அவற்றில் வேர் வளர்ச்சி ஊக்க மருந்து தடவப்பட்டது. பிறகு மரத்தை தொடர்ந்து கண்காணித்து வந்தனர். ஒரு சில நாட்களுக்கு பின்னர் புதிய கிளைகள் துளிர்விடத் துவங்கின.
இந்த நிலையில், மரம் உயிருடன் இருப்பது உறுதி செய்யப்பட்ட பிறகு இன்று இரண்டு ராட்சத கிரேன்கள் மூலம் மரம் வேருடன் பிடுங்கப்பட்டது.
இதையடுத்து, ராட்சத சரக்கு லாரி உதவியுடன் சுமார் 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு, வேருடன் பிடுங்கப்பட்ட 15 டன் எடை கொண்ட அந்த அரசமரம் லாரியில் ஏற்றப்பட்டது.
பின்னர், அங்கிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காளம்பளையம் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு உள்ள ஒரு தோட்டத்தில் மறுநடவு செய்யப்பட்டது. மரம் நடவு செய்யப்படும் இடத்தில் 12 அடி ஆழத்திலும், 16 அடி அகலத்திலும் குழி தோண்டப்பட்டு, அதில் மரத்திற்கு தேவையான அனைத்து உரங்களும் இடப்பட்டு மரம் நடவு செய்யப்பட்டது.