கோவை: கடலூரில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த காவலர்களை பணியிட மாற்றம் செய்ததை கண்டித்து பொள்ளாச்சியில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோவை: கடலூரில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த காவலர்களை பணியிட மாற்றம் செய்ததை கண்டித்து பொள்ளாச்சியில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கடந்த அக்டோபர் 2ம் தேதி தந்தை பெரியார் நினைவு நாளையொட்டி, கடலூரில் காவல் துறையைச் சேர்ந்த மூன்று காவலர்கள் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதையடுத்து, அந்த மூன்று காவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள், பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தால் தான் பணியிட மாற்றும் செய்யப்பட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து, மூன்று காவலர்களை பணியிட மாற்றம் செய்த காவல்துறையை கண்டித்து, பொள்ளாச்சி பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது,
தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின், மாநில வெளியீட்டு கழக செயலாளர் மனோகரன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக,, கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் காவலர்களை இடமாற்றம் செய்த உயர் அதிகாரிகளையும், தமிழக அரசையும், கண்டித்து கோஷங்களையும் எழுப்பினர்.
கடந்த அக்டோபர் 2ம் தேதி தந்தை பெரியார் நினைவு நாளையொட்டி, கடலூரில் காவல் துறையைச் சேர்ந்த மூன்று காவலர்கள் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதையடுத்து, அந்த மூன்று காவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள், பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தால் தான் பணியிட மாற்றும் செய்யப்பட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து, மூன்று காவலர்களை பணியிட மாற்றம் செய்த காவல்துறையை கண்டித்து, பொள்ளாச்சி பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது,
தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின், மாநில வெளியீட்டு கழக செயலாளர் மனோகரன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக,, கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் காவலர்களை இடமாற்றம் செய்த உயர் அதிகாரிகளையும், தமிழக அரசையும், கண்டித்து கோஷங்களையும் எழுப்பினர்.