கோவை: கோவை செல்வபுரம் அருகே கேமராவை திருடிச் சென்ற நபரை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: கோவை செல்வபுரம் அருகே கேமராவை திருடிச் சென்ற நபரை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை செல்வபுரம் சாவித்திரி நகர் பகுதியை சேர்ந்தவர் சூர்யபிரகாஷ் (22). திருமண நிகழ்ச்சிகளுக்கு போட்டோ, வீடியோ ஒளிப்பதிவு செய்து வரும் இவர், தனது வீட்டின் அருகே ஸ்டுடியோ வைத்து உள்ளார்.
இந்நிலையில், கடந்த 13ம் தேதி இவரது ஸ்டுடியோவில் இருந்த கேனான் கேமராவை இரு சக்கர வாகனத்தில் வந்த நபர் திருடி சென்றார்.
பின்னர் இதுகுறித்து சூரியபிரகாஷ் செல்வபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்து இருந்தார். இதனிடையே, வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், கேமரா திருப்பூர் பகுதியில் இருப்பதும், கேமராவை திருடிச் சென்றது நெல்லையைச் சேர்ந்த ரிஷ்வன் என்பதும் தெரிய வந்தது.
இதனையடுத்து, அவரிடம் இருந்து கேமராவை பறிமுதல் செய்த போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை செல்வபுரம் சாவித்திரி நகர் பகுதியை சேர்ந்தவர் சூர்யபிரகாஷ் (22). திருமண நிகழ்ச்சிகளுக்கு போட்டோ, வீடியோ ஒளிப்பதிவு செய்து வரும் இவர், தனது வீட்டின் அருகே ஸ்டுடியோ வைத்து உள்ளார்.
இந்நிலையில், கடந்த 13ம் தேதி இவரது ஸ்டுடியோவில் இருந்த கேனான் கேமராவை இரு சக்கர வாகனத்தில் வந்த நபர் திருடி சென்றார்.
பின்னர் இதுகுறித்து சூரியபிரகாஷ் செல்வபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்து இருந்தார். இதனிடையே, வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், கேமரா திருப்பூர் பகுதியில் இருப்பதும், கேமராவை திருடிச் சென்றது நெல்லையைச் சேர்ந்த ரிஷ்வன் என்பதும் தெரிய வந்தது.
இதனையடுத்து, அவரிடம் இருந்து கேமராவை பறிமுதல் செய்த போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.