கோவை விளாங்குறிச்சி அருகே செல்போனை திருடிச் செல்ல முயன்றவரை நண்பர் உதவியுடன் பிடித்து போலீசில் ஒப்படைத்து சிறையில் அடைப்பு!

கோவை: கோவை விளாங்குறிச்சி அருகே செல்போனை திருடிச் செல்ல முயன்றவரை நண்பர் உதவியுடன் பிடித்து போலீசில் ஒப்படைத்து சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவை விளாங்குறிச்சி அருகே செல்போனை திருடிச் செல்ல முயன்றவரை நண்பர் உதவியுடன் பிடித்து போலீசில் ஒப்படைத்து சிறையில் அடைத்தனர்.

கோவை விளாங்குறிச்சி ரத்தினகிரி வீதி பகுதியில் வசித்து வருபவர் தங்கராஜ்(40). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், நேற்று காலை தனது செல்போனை ஜன்னல் அருகில் சார்ஜ் போட்டுவிட்டு தன் நண்பருடன் பேசி கொண்டு இருந்தார். அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த நபர் தங்கராஜிடம் விலாசம் விசாரிப்பது போல் நடித்து செல்போனை திடீரென தூக்கிக் கொண்டு தப்பிச் செல்ல முயன்றார்.

இதை கண்டு அதிர்ச்சியடைந்த தங்கராஜ் தனது நண்பர் உதவியுடன் அந்த வாலிபரை மடக்கி பிடித்து கோவில் பாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதனை தொடர்ந்து, போலீசார் மேற்கொண்ட விசாரணையில், அவர் பீளமேடு காந்தி மாநகர் பகுதியை சேர்ந்த சூர்யா(22) என்பதும், ஆக்டிங் டிரைவராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது. இதனையடுத்து, அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...