கோவை: கோவை விளாங்குறிச்சி அருகே செல்போனை திருடிச் செல்ல முயன்றவரை நண்பர் உதவியுடன் பிடித்து போலீசில் ஒப்படைத்து சிறையில் அடைத்தனர்.
கோவை: கோவை விளாங்குறிச்சி அருகே செல்போனை திருடிச் செல்ல முயன்றவரை நண்பர் உதவியுடன் பிடித்து போலீசில் ஒப்படைத்து சிறையில் அடைத்தனர்.
கோவை விளாங்குறிச்சி ரத்தினகிரி வீதி பகுதியில் வசித்து வருபவர் தங்கராஜ்(40). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், நேற்று காலை தனது செல்போனை ஜன்னல் அருகில் சார்ஜ் போட்டுவிட்டு தன் நண்பருடன் பேசி கொண்டு இருந்தார். அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த நபர் தங்கராஜிடம் விலாசம் விசாரிப்பது போல் நடித்து செல்போனை திடீரென தூக்கிக் கொண்டு தப்பிச் செல்ல முயன்றார்.
இதை கண்டு அதிர்ச்சியடைந்த தங்கராஜ் தனது நண்பர் உதவியுடன் அந்த வாலிபரை மடக்கி பிடித்து கோவில் பாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதனை தொடர்ந்து, போலீசார் மேற்கொண்ட விசாரணையில், அவர் பீளமேடு காந்தி மாநகர் பகுதியை சேர்ந்த சூர்யா(22) என்பதும், ஆக்டிங் டிரைவராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது. இதனையடுத்து, அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கோவை விளாங்குறிச்சி ரத்தினகிரி வீதி பகுதியில் வசித்து வருபவர் தங்கராஜ்(40). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், நேற்று காலை தனது செல்போனை ஜன்னல் அருகில் சார்ஜ் போட்டுவிட்டு தன் நண்பருடன் பேசி கொண்டு இருந்தார். அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த நபர் தங்கராஜிடம் விலாசம் விசாரிப்பது போல் நடித்து செல்போனை திடீரென தூக்கிக் கொண்டு தப்பிச் செல்ல முயன்றார்.
இதை கண்டு அதிர்ச்சியடைந்த தங்கராஜ் தனது நண்பர் உதவியுடன் அந்த வாலிபரை மடக்கி பிடித்து கோவில் பாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதனை தொடர்ந்து, போலீசார் மேற்கொண்ட விசாரணையில், அவர் பீளமேடு காந்தி மாநகர் பகுதியை சேர்ந்த சூர்யா(22) என்பதும், ஆக்டிங் டிரைவராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது. இதனையடுத்து, அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.