பெண்களின் பாதுகாப்பிற்கு துப்பாக்கி வைத்து கொள்ள அனுமதி வேண்டும் - கோவையில் திராவிடர் பண்பாட்டு கூட்டியக்க போராட்டத்தில் பெண்கள் கோரிக்கை!

கோவை: பெண்களின் பாதுகாப்பிற்கு துப்பாக்கி வைத்து கொள்ள அனுமதி அளித்திட வேண்டும் என கோவையில் திராவிடர் பண்பாட்டு கூட்டியக்கம் சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் பெண்கள் கோரிக்கை விடுத்தனர்.


கோவை: பெண்களின் பாதுகாப்பிற்கு துப்பாக்கி வைத்து கொள்ள அனுமதி அளித்திட வேண்டும் என கோவையில் திராவிடர் பண்பாட்டு கூட்டியக்கம் சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் பெண்கள் கோரிக்கை விடுத்தனர்.

உத்திரப்பிரதேச மாநிலன் ஹத்ராஸ் மாவடத்தில் பட்டியலின பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, அவர் மீது தாக்குதல் நடைபெற்றதில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, பெண்ணின் உடல் உறவினர்களிடம் கூட ஒப்படைக்கப்படாமல் எரிக்கப்பட்டது.

இந்த சம்பவத்தை கண்டித்தும், உத்திரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை கண்டித்தும் குற்றவாளிகளை கைது செய்யாமல் இருக்கும் காவல்துறையினரை கண்டித்து பல்வேறு கட்சியினரும் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.



இதன் ஒரு பகுதியாக, கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு திராவிடர் பண்பாட்டு கூட்டியக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இதில் தபெதிக, திவிக, திராவிடர் தமிழர் கட்சி, மே 17 இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.



இந்த ஆர்ப்பாட்டத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு நீதி வழங்க வேண்டும் எனவும், குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படும் உத்திரபிரதேச மாநில பாஜக அரசை கலைக்க வேண்டுமெனவும், பெண்களின் பாதுகாப்பிற்கு துப்பாக்கி வைத்து கொள்ள அனுமதி அளித்திட வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.



மேலும், பெண்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்கிட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு ஆனைக்கட்டியில...

கோவை கவுண்டம்பாளையத்தில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம் - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கவுண்டம்பாளையம் ஜீவா நகரில் 110 ஏக்கரில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் மா...

புதுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் ஐரோப்பாவை அசத்திய குமரகுரு மாணவர்கள்; 3 விருதுகள் வென்று சாதனை..!

இங்கிலாந்து, மொனாக்கோ மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை போட்டிகளில், கோவை குமரகுர...

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளுக்கு மின்தடை

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் ஜூலை 14 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும்....

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 13 பகுதிகளில் மின்தடை

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இ...

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) மின் பராமரிப்பு: 11 பகுதிகளில் மின்தடை

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை ஜூலை 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் ந...