கோவையில் பல்வேறு இடங்களில் ஏற்பட்ட வாகன விபத்தில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழப்பு!

கோவை: கோவையில் பல்வேறு இடங்களில் ஏற்பட்ட வாகன விபத்தில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.


கோவை: கோவையில் பல்வேறு இடங்களில் ஏற்பட்ட வாகன விபத்தில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கோவை காரமடை பகுதியை சேர்ந்தவர் சிவராஜ்(60). இவர் தனது நண்பர் கதிரவன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் மேட்டுபாளையத்தில் இருந்து கோவை நோக்கி வந்து கொண்டு இருந்தார்.

இந்நிலையில், காரமடை அருகே வந்த போது, மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்ததில் சிவராஜ் தடுமாறிக் கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தார். இதையடுத்து, அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிவராஜ் உயிரிழந்தார். இது குறித்து காரமடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதேபோல, கோவை கருமத்தம்பட்டி அடுத்த கோரிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அரவிந்த்(22). கட்டிட தொழிலாளியான இவர் நேற்று தனது மோட்டார் சைக்கிளில் கருமத்தம்பட்டியில் இருந்து கிட்டாம்பாளையம் நோக்கி சென்று கொண்டு இருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த கார் மோதியதில் தூக்கி வீசப்பட்டார். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், கோவை கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பிகாஸ் ஜலூய்(37). இவர் தனது மோட்டார் சைக்கிளில் பூ மார்க்கெட் அருகே சென்று கொண்டு இருந்த போது தவறான பாதையில் எதிரே வந்த மினி வேன், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். இதுகுறித்து போக்குவரத்து புலனாய்வு மேற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு ஆனைக்கட்டியில...

கோவை கவுண்டம்பாளையத்தில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம் - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கவுண்டம்பாளையம் ஜீவா நகரில் 110 ஏக்கரில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் மா...

புதுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் ஐரோப்பாவை அசத்திய குமரகுரு மாணவர்கள்; 3 விருதுகள் வென்று சாதனை..!

இங்கிலாந்து, மொனாக்கோ மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை போட்டிகளில், கோவை குமரகுர...

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளுக்கு மின்தடை

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் ஜூலை 14 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும்....

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 13 பகுதிகளில் மின்தடை

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இ...

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) மின் பராமரிப்பு: 11 பகுதிகளில் மின்தடை

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை ஜூலை 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் ந...