கோவை: விடுமுறையில் சொந்த ஊருக்கு சென்ற காவலர் பூச்சி கொல்லி மருந்து அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: விடுமுறையில் சொந்த ஊருக்கு சென்ற காவலர் பூச்சி கொல்லி மருந்து அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவைப்புதூர் பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படை நான்காம் அணியில் பணியாற்றி வருபவர் சதீஷ் குமார். கடந்த 2017ம் ஆண்டு தேர்வாகி பயிற்சி பெற்று வரும் காவலர் சதீஷ்குமார், வயிற்றுவலி பிரச்சனை காரணமாக சொந்த ஊரான திருச்சி மாவட்டம் குளித்தலைக்கு விடுமுறையில் சென்றிருந்தார்.
இந்நிலையில், நேற்று மாலை வீட்டில் பூச்சி மருந்து குடித்து பரிதாபமாக உயிரிழந்தார். கடந்த ஒரு சில மாதங்களாக வயிற்று வலி காரணமாக அவதிப்பட்டு வந்ததாக குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.
கோவைப்புதூர் பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படை நான்காம் அணியில் பணியாற்றி வருபவர் சதீஷ் குமார். கடந்த 2017ம் ஆண்டு தேர்வாகி பயிற்சி பெற்று வரும் காவலர் சதீஷ்குமார், வயிற்றுவலி பிரச்சனை காரணமாக சொந்த ஊரான திருச்சி மாவட்டம் குளித்தலைக்கு விடுமுறையில் சென்றிருந்தார்.
இந்நிலையில், நேற்று மாலை வீட்டில் பூச்சி மருந்து குடித்து பரிதாபமாக உயிரிழந்தார். கடந்த ஒரு சில மாதங்களாக வயிற்று வலி காரணமாக அவதிப்பட்டு வந்ததாக குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.