கோவை மாநகராட்சியில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றாத நபர்களிடம் இதுவரை ரூ.35 லட்சம் அபராதம் வசூல்!

கோவை: கோவை மாநகராட்சி பகுதிகளில் அரசின் கொரோனா விதிமீறல் தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து இதுவரை ரூ.35 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.


கோவை: கோவை மாநகராட்சி பகுதிகளில் அரசின் கொரோனா விதிமீறல் தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து இதுவரை ரூ.35 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

கோவை மாநகராட்சி நிர்வாகம் கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. முக கவசம் அணியாதவர்கள், சமூக இடைவெளி பின்பற்றாதவர்கள், பொது இடங்களில் எச்சில் துப்புவர்கள் என அரசின் விதிமுறைகளை மீறுபவர்களிடம் இருந்து மாநகராட்சி சார்பாக அபராதம் வசூலிக்கப்படுகிறது.

அதன்படி, முகக்கவசம் அணியவில்லை என்றால் ரூ.200, சமூக இடைவெளி பின்பற்றவில்லை என்றால் ரூ.500, பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படுகிறது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘‘கோவை மாநகராட்சி பகுதிகளில் அரசின் விதிமுறைகளை பின்பற்றாத பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடமிருந்து ரூ.35 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. கொரோனா விதிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு விதிக்கப்படும் அபராதம் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், இது குறித்த அறிவிப்பு பலகைகள் கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் முக கவசம் அணிவதுடன் அரசு கூறியுள்ள கொரோனா தடுப்பு வழிகாட்டி விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்,’’ என்று தெரிவித்தனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு ஆனைக்கட்டியில...

கோவை கவுண்டம்பாளையத்தில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம் - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கவுண்டம்பாளையம் ஜீவா நகரில் 110 ஏக்கரில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் மா...

புதுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் ஐரோப்பாவை அசத்திய குமரகுரு மாணவர்கள்; 3 விருதுகள் வென்று சாதனை..!

இங்கிலாந்து, மொனாக்கோ மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை போட்டிகளில், கோவை குமரகுர...

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளுக்கு மின்தடை

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் ஜூலை 14 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும்....

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 13 பகுதிகளில் மின்தடை

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இ...

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) மின் பராமரிப்பு: 11 பகுதிகளில் மின்தடை

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை ஜூலை 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் ந...