கோவை: பொள்ளாச்சி நகரில் குடியிருப்பு நிறைந்த பகுதிகளில் அடிக்கடி நடக்கும் திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட சம்வங்களை கட்டுப்படுத்தும் வகையில், பொதுமக்களே முன்வந்து தங்கள் பகுதிகளில் சிசிடிசி கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என போலீசார் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
கோவை: பொள்ளாச்சி நகரில் குடியிருப்பு நிறைந்த பகுதிகளில் அடிக்கடி நடக்கும் திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட சம்வங்களை கட்டுப்படுத்தும் வகையில், பொதுமக்களே முன்வந்து தங்கள் பகுதிகளில் சிசிடிசி கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என போலீசார் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இருப்பினும், நகர் பகுதிகளில், குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதில், குடியிருப்புகள் மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள ஜோதிநகரில், திருட்டு சம்பவங்கள் நடப்பதை தவிர்ப்பது மட்டுமின்றி, குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கத்தில், பொதுமக்களே முன்வந்து ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அதிலும், ஜோதிநகர் டி காலனி மற்றும் எம்கே வீதியில் குற்றச்செயல்களை தடுக்கும் வகையில் 6 கேமராக்கள் அமைக்கப்பட்டன. அந்த கேமராக்களின் செயல்பாடு துவக்க விழா நேற்று நடைபெற்றது.

இதற்கு, டிஎஸ்பி, சிவக்குமார் தலைமை தாங்கினார். இதில், கோவை மத்திய கூட்டுறவு சங்க தலைவர், கிருஷ்ணகுமார் கலந்து கொண்டு, கேமராக்களின் செயல்பாட்டை துவக்கி வைத்தார். சிசிடிவி கேமரா பொருத்துவது மட்டுமின்றி, அதை முறையாக பராமரித்து குற்ற சம்பவங்களை கண்காணிக்க, காவல்துறைக்கு பொதுமக்கள், உறுதுணையாக இருக்க வேண்டும் என்று, பொள்ளாச்சி டிஎஸ்பி சிவக்குமார் கேட்டுக்கொண்டார்.
இருப்பினும், நகர் பகுதிகளில், குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதில், குடியிருப்புகள் மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள ஜோதிநகரில், திருட்டு சம்பவங்கள் நடப்பதை தவிர்ப்பது மட்டுமின்றி, குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கத்தில், பொதுமக்களே முன்வந்து ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அதிலும், ஜோதிநகர் டி காலனி மற்றும் எம்கே வீதியில் குற்றச்செயல்களை தடுக்கும் வகையில் 6 கேமராக்கள் அமைக்கப்பட்டன. அந்த கேமராக்களின் செயல்பாடு துவக்க விழா நேற்று நடைபெற்றது.
இதற்கு, டிஎஸ்பி, சிவக்குமார் தலைமை தாங்கினார். இதில், கோவை மத்திய கூட்டுறவு சங்க தலைவர், கிருஷ்ணகுமார் கலந்து கொண்டு, கேமராக்களின் செயல்பாட்டை துவக்கி வைத்தார். சிசிடிவி கேமரா பொருத்துவது மட்டுமின்றி, அதை முறையாக பராமரித்து குற்ற சம்பவங்களை கண்காணிக்க, காவல்துறைக்கு பொதுமக்கள், உறுதுணையாக இருக்க வேண்டும் என்று, பொள்ளாச்சி டிஎஸ்பி சிவக்குமார் கேட்டுக்கொண்டார்.