கோவை: கோவை ஆத்து பொள்ளாச்சி அருகே வாங்கிய கடனை திருப்பி தர முடியாத காரணமாக விரக்தியில் விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவை ஆத்து பொள்ளாச்சி அருகே வாங்கிய கடனை திருப்பி தர முடியாத காரணமாக விரக்தியில் விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவையை அடுத்து ஆத்து பொள்ளாச்சி பகுதியை சேர்ந்தவர் சக்திவேல்(46). விவசாயம் செய்து வரும் அவர் தேங்காய் வியாபாரமும் செய்து வந்து உள்ளார். கடந்த சில மாதமாக தொழில் நஷ்டம் ஏற்படவே உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் கடன் பெற்றுள்ளார்.
இதனிடையே, வாங்கிய பணத்தை குறித்த நேரத்தில் திருப்பி தர முடியாததின் காரணமாக மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று மதியம் தேங்காய் குடோன் சென்றவர் பூச்சி மருந்து குடித்ததில் மயங்கி விழுந்துள்ளார். குடோனுக்கு சென்ற சக்திவேல் வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் குடும்பத்தினர் அவரை தேடிச் சென்றுள்ளனர்.
இதனையடுத்து, அங்கு சக்திவேல் மயங்கிய நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தவர்கள், அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
பின்னர், இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொள்ளாச்சி தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சக்திவேலின் உடல் பிரேத பரிசோதனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
கோவையை அடுத்து ஆத்து பொள்ளாச்சி பகுதியை சேர்ந்தவர் சக்திவேல்(46). விவசாயம் செய்து வரும் அவர் தேங்காய் வியாபாரமும் செய்து வந்து உள்ளார். கடந்த சில மாதமாக தொழில் நஷ்டம் ஏற்படவே உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் கடன் பெற்றுள்ளார்.
இதனிடையே, வாங்கிய பணத்தை குறித்த நேரத்தில் திருப்பி தர முடியாததின் காரணமாக மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று மதியம் தேங்காய் குடோன் சென்றவர் பூச்சி மருந்து குடித்ததில் மயங்கி விழுந்துள்ளார். குடோனுக்கு சென்ற சக்திவேல் வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் குடும்பத்தினர் அவரை தேடிச் சென்றுள்ளனர்.
இதனையடுத்து, அங்கு சக்திவேல் மயங்கிய நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தவர்கள், அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
பின்னர், இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொள்ளாச்சி தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சக்திவேலின் உடல் பிரேத பரிசோதனைக்கு வைக்கப்பட்டுள்ளது.