கோவையில் சுமார் 51 லட்சம் ரூபாய் கையாடல் செய்த திருமண மண்டப மேலாளரை கைது செய்து காவல் துறையினர் நடவடிக்கை

கோவை: கோவை அடுத்த நல்லம்பாளையம், சுப்பண்ண கவுண்டர் லே-அவுட் பகுதியை சேர்ந்த அவிநாசியப்பன் என்பவரது மகன் ராமதாஸ் (45).


கோவை: கோவை அடுத்த நல்லம்பாளையம், சுப்பண்ண கவுண்டர் லே-அவுட் பகுதியை சேர்ந்த அவிநாசியப்பன் என்பவரது மகன் ராமதாஸ் (45).

நல்லாம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் பொன்மணி திருமண மண்டபத்தில், கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 2018ம் ஆண்டு முதல், திருமண மண்டப வங்கிக் கணக்கில் இருந்து ஆன்லைன் பரிவர்த்தனைகள் மூலம் தனது வங்கிக் கணக்கிற்கு சுமார் 51 லட்சம் ரூபாய் அளவுக்கு கையாடல் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து திருமண மண்டப உரிமையாளர் சுரேஷ்குமார் (30) தங்களது நிறுவன மேலாளர் ராமதாஸ் கடந்த இரண்டு ஆண்டுகளில் 51,11358 ரூபாய் கையாடல் செய்ததாக, கடந்த மார்ச் மாதம் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த காவல்துறையினர், மேலாளர் ராமதாசை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு ஆனைக்கட்டியில...

கோவை கவுண்டம்பாளையத்தில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம் - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கவுண்டம்பாளையம் ஜீவா நகரில் 110 ஏக்கரில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் மா...

புதுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் ஐரோப்பாவை அசத்திய குமரகுரு மாணவர்கள்; 3 விருதுகள் வென்று சாதனை..!

இங்கிலாந்து, மொனாக்கோ மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை போட்டிகளில், கோவை குமரகுர...

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளுக்கு மின்தடை

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் ஜூலை 14 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும்....

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 13 பகுதிகளில் மின்தடை

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இ...

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) மின் பராமரிப்பு: 11 பகுதிகளில் மின்தடை

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை ஜூலை 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் ந...