கோவை கொடிசியாவில் கொரோனா சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் மருத்துவ ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு!

கோவை: கோவை கொடிசியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் மருத்துவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


கோவை: கோவை கொடிசியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் மருத்துவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் தீவிரமடைந்துள்ளதன் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் இஎஸ்ஐ மருத்துவமனை, அரசு மருத்துவமனை மற்றும் கொடிசியா வளாகத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், கோவை கொடிசியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த இராமசாமி(66) என்பவர் கழிவறையில் கீழே விழுந்து உயிரிழந்தார். இதனையடுத்து, அவரது உடலை எடுத்து செல்ல ஊழியர்கள் முயற்சி செய்து வருகின்றனர்.



இதனிடையே, கோவை கொடிசியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் மருத்துவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அப்போது, கொடிசியா வளாகத்தில் அனுமதிக்கப்பட்டு உள்ள நோயாளிகள் மருந்துகள், கபசுர குடிநீர் உள்ளிட்ட முறையான எந்த வசதிகளும் இல்லாமலும், போதுமான மருத்துவர்கள் இல்லாமல் அவதியடைந்து வருவதாக குற்றம்சாட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும், கொரோனா தொற்று உறுதி செய்யப்படும் போது, தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என வலியுறுத்தி தங்களை அழைத்து வரும் அதிகாரிகள் நோயாளிகளை அழைக்கழிப்பதாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து, நோயாளிகளுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு ஆனைக்கட்டியில...

கோவை கவுண்டம்பாளையத்தில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம் - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கவுண்டம்பாளையம் ஜீவா நகரில் 110 ஏக்கரில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் மா...

புதுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் ஐரோப்பாவை அசத்திய குமரகுரு மாணவர்கள்; 3 விருதுகள் வென்று சாதனை..!

இங்கிலாந்து, மொனாக்கோ மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை போட்டிகளில், கோவை குமரகுர...

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளுக்கு மின்தடை

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் ஜூலை 14 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும்....

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 13 பகுதிகளில் மின்தடை

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இ...

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) மின் பராமரிப்பு: 11 பகுதிகளில் மின்தடை

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை ஜூலை 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் ந...