கோவை: கோவை மாவட்டத்தில் கொரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனைகள் தவிர்த்து 26 தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 6 தனியார் மருத்துவமனைகளுக்கு கொரோனா சிகிச்சை அளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கோவை: கோவை மாவட்டத்தில் கொரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனைகள் தவிர்த்து 26 தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 6 தனியார் மருத்துவமனைகளுக்கு கொரோனா சிகிச்சை அளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் 50 சதவீதம் பேர் வரை பிற மாவட்டங்களை சேர்ந்தவர்கள் கொரோனா சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
தற்போது, கோவையில் அதிகரித்து வரும் கொரோனா நோய்த் தொற்றுக்கு ஏற்ப சிகிச்சை வசதிகளை அதிகரிக்கும் வகையில், கீழ்கண்ட புதிய
மருத்துவமனைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
1. சாய்பாபா காலனி, கே.டி.வி.ஆர் மருத்துவமனை
2. குனியமுத்தூர் கே.ஜெ. மருத்துவமனை
3. துடியலூர், உமா நர்சிங் ஹோம்
4. அன்னூர் என்.எம். மருத்துவமனை
5. சின்னியம்பாளையம் வெங்கடேஸ்வரா மருத்துவமனை
6. ராமநாதபுரம், லியோ ஆர்தோ கேர் மருத்துவமனை.
இந்த மருத்துவமனைகளில் மொத்தம் 226 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன, என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, சுகாதாரத் துறை இணை இயக்குநர் கிருஷ்ணா கூறுகையில், ‘‘கோவையில் கூடுதலாக 6 தனியார் மருத்துவமனைகளுக்கு கொரோனா சிகிச்சையளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில், தற்போது அரசு மருத்துவமனைகளில் 1,305 படுக்கைகள், தனியார் மருத்துவமனைகளில் 2,362 படுக்கைகள், கொரோனா சிகிச்சை மையங்களில் 1,539 படுக்கைகள் சேர்த்து 5 ஆயிரத்து 206 படுக்கை வசதிகள் பயன்பாட்டில் உள்ளன."
மேலும், இது தவிர அரசு மருத்துவமனைகளில் 1,519 படுக்கைகள், தனியார் மருத்துவமனைகளில் 2,362 படுக்கைகள், கொரோனா சிகிச்சை மையங்களில் 5,586 படுக்கைகள் என மொத்தம் 9 ஆயிரத்து 467 படுக்கை வசதிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காத்திருப்பில் வைக்கப்பட்டுள்ளன, என்றார்.