திருப்பூர்: திருப்பூர் அடுத்த செங்கப்பள்ளி அருகே வடமாநிலங்களில் இருந்து கேரளாவுக்கு மாடுகளை கடத்தி சென்ற இரண்டு லாரிகளை சிவசேனா கட்சியினர் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர்: திருப்பூர் அடுத்த செங்கப்பள்ளி அருகே வடமாநிலங்களில் இருந்து கேரளாவுக்கு மாடுகளை கடத்தி சென்ற இரண்டு லாரிகளை சிவசேனா கட்சியினர் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வடமாநிலங்களில் இருந்து இறைச்சிக்காக கேரள மாநிலம் கோட்டயம் மற்றும் கொச்சி நகரங்களுக்கு மாடுகளை கடத்திச் சென்ற இரண்டு லாரிகளை திருப்பூர் அடுத்த செங்கப்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சிவசேனா கட்சியினர் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஊத்துக்குளி மற்றும் பெருமாநல்லூர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் ஆந்திராவிலிருந்து 29 மாடுகளை ஏற்றிக்கொண்டு ஒரு லாரியும், ஹரியானாவில் இருந்து 38 மாடுகளை ஏற்றுக்கொண்டும் ஒரு லாரியும் சென்றது தெரிய வந்தது.
இதனையடுத்து, வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் பெருமாநல்லூர் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். மேலும், வாகன ஓட்டிகள் இருவர் மீதும் பசுவதை தடை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வடமாநிலங்களில் இருந்து இறைச்சிக்காக கேரள மாநிலம் கோட்டயம் மற்றும் கொச்சி நகரங்களுக்கு மாடுகளை கடத்திச் சென்ற இரண்டு லாரிகளை திருப்பூர் அடுத்த செங்கப்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சிவசேனா கட்சியினர் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஊத்துக்குளி மற்றும் பெருமாநல்லூர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் ஆந்திராவிலிருந்து 29 மாடுகளை ஏற்றிக்கொண்டு ஒரு லாரியும், ஹரியானாவில் இருந்து 38 மாடுகளை ஏற்றுக்கொண்டும் ஒரு லாரியும் சென்றது தெரிய வந்தது.
இதனையடுத்து, வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் பெருமாநல்லூர் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். மேலும், வாகன ஓட்டிகள் இருவர் மீதும் பசுவதை தடை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.