கோவை: கோவை போத்தனூர் அருகே அரிசி வியாபாரியிடம் நூதன முறையில் மோசடி செய்த ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், மற்றொரு நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை: கோவை போத்தனூர் அருகே அரிசி வியாபாரியிடம் நூதன முறையில் மோசடி செய்த ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், மற்றொரு நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
திருச்சி மாவட்டம் பீமா நகரை சேர்ந்த முகமது இப்ராஹிம் மகன் முகமது தமீமுன் அன்சாரி (39). இவர் திருச்சியில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி இறக்குமதி வியாபாரம் செய்து வருகிறார்.
இவரிடம் கடந்த 2018ம் ஆண்டு கோவையை சேர்ந்த அஷ்ரப் மற்றும் சலீம் என்ற இருவர் இணையதளம் மூலமாக முகமது தமீமுன் அன்சாரியை அணுகி, கோவை போத்தனூர் பகுதியில் தாங்கள் நடத்தி வரும் அரிசி மண்டிக்கு 21 டன் அரிசி வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
மேலும், தங்களது நிறுவனத்தின் ஜி.எஸ்.டி எண்ணையும் அனுப்பி வைத்துள்ளனர். இதனை நம்பி முன் பணம் எதுவும் பெறாமல் சுமார் ரூ.9 லட்சத்து 97 ஆயிரம் மதிப்புள்ள 21 டன் அரிசி மூட்டைகளை தமீமுன் அன்சாரி அனுப்பி வைத்துள்ளார். அரிசியை பெற்றுக் கொண்டு தொடர்ந்து பணம் தராமல் அஷ்ரப் மற்றும் சலீம் ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், மீண்டும் கடந்த சில மாதங்களுக்கு முன் அஷ்ரப்பை நேரில் சந்தித்து பணம் கேட்டுள்ளார். ஆனால், பணம் தர மறுத்ததோடு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, முகமது தமீமுன் அன்சாரி போத்தனூர் குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார். அவரது புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
போலீசாரின் விசாரணையில் அஷ்ரப் ஏற்கனவே பல மோசடிகளில் ஈடுபட்டு சிறை சென்றவர் என்பது தெரியவந்தது. இந்நிலையில், தலைமறைவாக இருந்த அஷ்ரபை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், இவரது கூட்டாளியான சலீமை தேடி வருகின்றனர்.
திருச்சி மாவட்டம் பீமா நகரை சேர்ந்த முகமது இப்ராஹிம் மகன் முகமது தமீமுன் அன்சாரி (39). இவர் திருச்சியில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி இறக்குமதி வியாபாரம் செய்து வருகிறார்.
இவரிடம் கடந்த 2018ம் ஆண்டு கோவையை சேர்ந்த அஷ்ரப் மற்றும் சலீம் என்ற இருவர் இணையதளம் மூலமாக முகமது தமீமுன் அன்சாரியை அணுகி, கோவை போத்தனூர் பகுதியில் தாங்கள் நடத்தி வரும் அரிசி மண்டிக்கு 21 டன் அரிசி வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
மேலும், தங்களது நிறுவனத்தின் ஜி.எஸ்.டி எண்ணையும் அனுப்பி வைத்துள்ளனர். இதனை நம்பி முன் பணம் எதுவும் பெறாமல் சுமார் ரூ.9 லட்சத்து 97 ஆயிரம் மதிப்புள்ள 21 டன் அரிசி மூட்டைகளை தமீமுன் அன்சாரி அனுப்பி வைத்துள்ளார். அரிசியை பெற்றுக் கொண்டு தொடர்ந்து பணம் தராமல் அஷ்ரப் மற்றும் சலீம் ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், மீண்டும் கடந்த சில மாதங்களுக்கு முன் அஷ்ரப்பை நேரில் சந்தித்து பணம் கேட்டுள்ளார். ஆனால், பணம் தர மறுத்ததோடு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, முகமது தமீமுன் அன்சாரி போத்தனூர் குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார். அவரது புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
போலீசாரின் விசாரணையில் அஷ்ரப் ஏற்கனவே பல மோசடிகளில் ஈடுபட்டு சிறை சென்றவர் என்பது தெரியவந்தது. இந்நிலையில், தலைமறைவாக இருந்த அஷ்ரபை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், இவரது கூட்டாளியான சலீமை தேடி வருகின்றனர்.