கோவை சூலூர் அருகே குழந்தையை தாயிடம் இருந்து தூக்கி சென்ற தந்தையால் பரபரப்பு! போலீசார் விசாரணை

கோவை: கோவை சூலூர் அருகே குடும்ப தகராறு காரணமாக குழந்தையை தாயிடம் இருந்து தூக்கி சென்ற தந்தையால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


கோவை: கோவை சூலூர் அருகே குடும்ப தகராறு காரணமாக குழந்தையை தாயிடம் இருந்து தூக்கி சென்ற தந்தையால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தருமபுரி மாவட்டத்தை சேர்ந்தவர் நரசிம்மன்(34). கடந்த சில வருடங்களுக்கு முன் கோவை சுல்தான் பேட்டை பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய போது, சூலூர் அடுத்து செலக்கரிச்சல் பகுதியை சேர்ந்த சரண்யா(28) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியது. இதனையடுத்து, இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இத்தம்பதியினருக்கு ஒன்பது வயதில் மகன் உள்ளார்.

இதனிடையே, கடந்த மூன்று வருடங்களுக்கு முன் கணவன் -மனைவியிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக கணவரை பிரிந்து சென்ற சரண்யா, செலகரிச்சல் பகுதியில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் மகனுடன் வசித்து கொண்டு மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். நரசிம்மனும் சரண்யாவும் விவாகரத்து செய்து கொள்ள முடிவு செய்து நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் மனைவியை சமாதானம் செய்ய அதே பகுதியை சேர்ந்த பிரவீன் என்பவருடன் சரண்யா வீட்டிற்கு சென்ற நரசிம்மன் தனது மகனை பார்க்க வேண்டும் என கூறியுள்ளார். இதற்கு சரண்யா அனுமதி மறுக்க திடீரென நரசிம்மன் மற்றும் பிரவீன் சிறுவனை தூக்கிக்கொண்டு ஓடியுள்ளனர்.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சரண்யா மற்றும் அவரது குடும்பத்தினர் தடுத்து நிறுத்தியபோது வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த இருவரும் தகாத வார்த்தைகளால் திட்டியதுடன் சரண்யா மற்றும் அவரது பெற்றோரை தாக்கியதுடன் கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

பின்னர், இதுகுறித்து சரண்யா சுல்தான் பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு ஆனைக்கட்டியில...

கோவை கவுண்டம்பாளையத்தில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம் - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கவுண்டம்பாளையம் ஜீவா நகரில் 110 ஏக்கரில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் மா...

புதுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் ஐரோப்பாவை அசத்திய குமரகுரு மாணவர்கள்; 3 விருதுகள் வென்று சாதனை..!

இங்கிலாந்து, மொனாக்கோ மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை போட்டிகளில், கோவை குமரகுர...

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளுக்கு மின்தடை

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் ஜூலை 14 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும்....

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 13 பகுதிகளில் மின்தடை

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இ...

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) மின் பராமரிப்பு: 11 பகுதிகளில் மின்தடை

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை ஜூலை 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் ந...