நீலகிரி: நீலகிரி மாவட்டம் கொலக்கம்பை பகுதியில் மனைவியிடம் தகாத உறவு வைத்திருந்ததாக கூறி, எஸ்டேட் தொழிலாளி செல்வராஜ் என்பவரை அடித்துக் கொன்ற வழக்கில் பெண்ணின் கணவரை போலீசார் கைது செய்தனர்.
நீலகிரி: நீலகிரி மாவட்டம் கொலக்கம்பை பகுதியில் மனைவியிடம் தகாத உறவு வைத்திருந்ததாக கூறி, எஸ்டேட் தொழிலாளி செல்வராஜ் என்பவரை அடித்துக் கொன்ற வழக்கில் பெண்ணின் கணவரை போலீசார் கைது செய்தனர்.
நீலகிரி மாவட்டம் கொலக்கம்பை பகுதியில் வசித்து வருபவர்கள் செல்வராஜ் (39 )மற்றும் ஆனந்த ராஜ் (42). இவர்கள், இங்குள்ள தனியார் எஸ்டேட் தொழிலாளர்களாக, வேலை செய்து வருகின்றனர்.
இந்நிலையி்ல், செல்வராஜ் தனது மனைவி மாரியாயிடம் தகாத உறவு வைத்திருந்ததை கணவர் ஆனந்தராஜ் ஞாயிற்றுக் கிழமை கண்டித்துள்ளார், வாக்குவாதம் முற்றிப் போகவே, செல்வராஜை குடி போதையி்ல், ஆனந்தராஜ் பலமாக தாக்கியுள்ளார். இதில், வயிறு நெஞ்சுப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்ட செல்வராஜ் திங்கள் கிழமை உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து கொலக்கம்பை காவல் ஆய்வாளர் (பொறுப்பு) ஜெயமுருகன், இந்த வழக்கினை விசாரித்து, அதனை கொலை வழக்காக பதிவு செய்து ஆனந்தராஜை கைது செய்தார்.
மேலும், செல்வராஜின் உடன் பிரேதப் பரிசோதனைக்காக உதகை அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டது.
நீலகிரி மாவட்டம் கொலக்கம்பை பகுதியில் வசித்து வருபவர்கள் செல்வராஜ் (39 )மற்றும் ஆனந்த ராஜ் (42). இவர்கள், இங்குள்ள தனியார் எஸ்டேட் தொழிலாளர்களாக, வேலை செய்து வருகின்றனர்.
இந்நிலையி்ல், செல்வராஜ் தனது மனைவி மாரியாயிடம் தகாத உறவு வைத்திருந்ததை கணவர் ஆனந்தராஜ் ஞாயிற்றுக் கிழமை கண்டித்துள்ளார், வாக்குவாதம் முற்றிப் போகவே, செல்வராஜை குடி போதையி்ல், ஆனந்தராஜ் பலமாக தாக்கியுள்ளார். இதில், வயிறு நெஞ்சுப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்ட செல்வராஜ் திங்கள் கிழமை உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து கொலக்கம்பை காவல் ஆய்வாளர் (பொறுப்பு) ஜெயமுருகன், இந்த வழக்கினை விசாரித்து, அதனை கொலை வழக்காக பதிவு செய்து ஆனந்தராஜை கைது செய்தார்.
மேலும், செல்வராஜின் உடன் பிரேதப் பரிசோதனைக்காக உதகை அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டது.