திருப்பூரில் 20 வருடங்களாக பணம் வழங்காத நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆட்சியர் அலுவலகத்தில் முதியவர் உண்ணாவிரத போராட்டம்!

திருப்பூர்: திருப்பூரில் பின்னலாடை நிறுவனம் நடத்தி இயந்திரங்களை விற்று 20 வருடங்களாகியும் பணத்தை வழங்காத நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி முதியவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


திருப்பூர்: திருப்பூரில் பின்னலாடை நிறுவனம் நடத்தி இயந்திரங்களை விற்று 20 வருடங்களாகியும் பணத்தை வழங்காத நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி முதியவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்திற்குட்பட்ட கேத்தனூர் பகுதியை சேர்ந்தவர் நாராயணசாமி. இவர் 1999ம் ஆண்டு பின்னலாடை நிறுவனம் நடத்தி வந்த சூழ்நிலையில், இயந்திரங்களை சாய ஆலை நடத்திவரும் நாகராஜன் என்பவரிடம் விற்றுள்ளார். இதற்கான தொகை 8 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை அவர் காசோலையாக வழங்கியுள்ளார்.

ஆனால், வங்கி கணக்கில் பணமில்லை என வங்கியில் இருந்து திரும்பி வந்த நிலையில், 20 வருடமாக பணத்தை திருப்பித் தராமல் இழுத்தடித்து வருவதாகவும் இது குறித்து காமநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் பலமுறை புகார் அளித்தும் விசாரணைக்காக அழைத்து உரிய பதில் இல்லாமல் அனுப்பி வைத்து வருவதாக தெரிவித்தார்.

இந்த நிலையில், பணத்தை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி 86 வயதான நாராயணசாமி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.

அப்போது, மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததையடுத்து முதியவர் போராட்டத்தை கைவிட்டு விசாரணைக்காக சென்றார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளுக்கு மின்தடை

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் ஜூலை 14 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும்....

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 13 பகுதிகளில் மின்தடை

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இ...

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) மின் பராமரிப்பு: 11 பகுதிகளில் மின்தடை

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை ஜூலை 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் ந...

மருதூர் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 13 பகுதிகளில் மின்தடை

மருதூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இதனால் தோளம்பா...

தேவராயபுரம் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளில் மின்தடை

தேவராயபுரம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால...

கோவையில் இரண்டு மாத ஊதியம் தராததால் உரிமைத் திட்டப் பணியாளர்கள் போராட்டம்

கோவையில் தமிழ்நாடு உரிமைத் திட்டத்தில் பணியாற்றும் 50க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இரண்டு மாதங்களாக ஊதியம் வழங்கப்படாததால்...