பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகரில் உள்ள ராஜாராமன் வீதியை சேர்ந்தவர் மணிகண்டன் (49). பொள்ளாச்சியில் உள்ள மரக்கடை ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம், குடும்பத்துடன் வெளியூர் சென்றுள்ளார்.
பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகரில் உள்ள ராஜாராமன் வீதியை சேர்ந்தவர் மணிகண்டன் (49). பொள்ளாச்சியில் உள்ள மரக்கடை ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம், குடும்பத்துடன் வெளியூர் சென்றுள்ளார்.
இந்நிலையில், நேற்று வீடு திரும்பிய போது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து, வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த ரூ.9 ஆயிரம் பணம் மற்றும் 2.5 சவரன் நகை கொள்ளை போனது தெரியவந்தது.
இதையடுத்து, பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய போலீசாரிடம் மணிகண்டன் புகார் தெரிவித்தார். புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்கு பதிவு செய்து, கைரேகை உள்ளிட்ட தடயங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று வீடு திரும்பிய போது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து, வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த ரூ.9 ஆயிரம் பணம் மற்றும் 2.5 சவரன் நகை கொள்ளை போனது தெரியவந்தது.
இதையடுத்து, பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய போலீசாரிடம் மணிகண்டன் புகார் தெரிவித்தார். புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்கு பதிவு செய்து, கைரேகை உள்ளிட்ட தடயங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.