பொள்ளாச்சி குரங்கு அருவியில் நீர்வரத்து சீரானது. சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை.
கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் குரங்கு அருவிக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் இடமாக இருந்துவந்தது.
கடந்த ஏழு மாதங்களாக, கொரோனா நோய் தொற்று மற்றும் ஊரடங்கு காரணமாக, மூடப்பட்ட குரங்கு அருவியில், இதுவரை சுற்றுலா பயணிகள் குளிக்க அரசு அனுமதி அளிக்கவில்லை. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக மேற்கு தொடர்ச்சி மலைகளில் தொடர்ந்து மழை பெய்து வந்ததால், குரங்கு அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது.
தற்போது, மழை பொழிவு நின்றதால், அருவிக்கு நீர்வரத்து குறைந்துள்ளது .தற்போது, தண்ணீர் சீராகி உள்ளது. ஊரடங்கு தளர்வில் சுற்றுலா தலங்களுக்கு அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், பாதுகாப்பு கருதி குரங்கு அருவிக்கு பொது மக்கள் செல்ல மாவட்ட நிர்வாகம், அனுமதி அளிக்கவில்லை.
கடந்த ஏழு மாதங்களாக, கொரோனா நோய் தொற்று மற்றும் ஊரடங்கு காரணமாக, மூடப்பட்ட குரங்கு அருவியில், இதுவரை சுற்றுலா பயணிகள் குளிக்க அரசு அனுமதி அளிக்கவில்லை. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக மேற்கு தொடர்ச்சி மலைகளில் தொடர்ந்து மழை பெய்து வந்ததால், குரங்கு அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது.
தற்போது, மழை பொழிவு நின்றதால், அருவிக்கு நீர்வரத்து குறைந்துள்ளது .தற்போது, தண்ணீர் சீராகி உள்ளது. ஊரடங்கு தளர்வில் சுற்றுலா தலங்களுக்கு அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், பாதுகாப்பு கருதி குரங்கு அருவிக்கு பொது மக்கள் செல்ல மாவட்ட நிர்வாகம், அனுமதி அளிக்கவில்லை.