முத்தண்ணன் குளக்கரையில் வசிக்கும் 300 பேருக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யும் பணி தீவிரம்

முத்தண்ணன் குளக்கரையில் வசிக்கும் 300 பேருக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யும் பணி தீவிரம்

கோவை: கோவை முத்தண்ணன் குளக்கரையில் வசிக்கும் 300 நபர்களுக்கு வீடு ஒதுக்கீடு செய்யும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக, மாநகராட்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், கோவை முத்தண்ணன் குளத்தை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ், கோவை மாநகராட்சி அக்குளக்கரையில் வசித்து வந்த சுமார் 1800 வீடுகளை அப்புறப்படுத்தும் பணிகளை மேற்கொண்டனர்.



அங்கு வசித்து வந்த மக்களுக்கு, மலுமிச்சம்ப்பட்டி, கீரணத்தம் போன்ற இடங்களில், குடிசை மாற்று வாரியத்தால் மாற்று வீடுகள் ஏற்பாடு செய்யப்பட்டது.

தொடர்ந்து, பொதுமக்கள் இந்த வீடுகளை காலி செய்துவிட்டு அரசு ஒதுக்கிய வீடுகளுக்கு குடி பெயர்ந்தனர்.

இதனிடையே, குளக்கரையை ஆக்கிரமித்து வீடு கட்டிய ஒரு தரப்பினர் மட்டும் வீடுகளை இடித்து அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து, குளக்கரையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகளை இடித்து அகற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.



இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், குளக்கரையில் வசிப்பவர்கள் 4 வாரங்களுக்குள் குடிசை மாற்று வாரியத்தை அணுகி வீடுகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அதன் பின்னர், மாநகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்பு வீடுகளை இடித்து அகற்ற வேண்டும், என்று உத்தரவிட்டடது.

இது குறித்து கோவை மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில்:

கோவை முத்தண்ணன் குளக்கரையில் 1,800 வீடுகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டு உள்ளன. இவர்களுக்கு குடிசை மாற்று வாரியம் சார்பில் உக்கடம்,மலுமிச்சம்பட்டி கீரணத்தம் உள்ளிட்ட இடங்களில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில், 1,500 குடும்பங்களுக்கு மாற்று வீடுகள் வழங்கப்பட்டு விட்டன. அவர்கள் அங்கே, குடிபெயர்ந்து சென்றுவிட்டனர்.

இதனிடையே, ஆக்கிரமிப்பு வீடுகளில் வசிக்கும் சிலர் தங்களுக்கு வீடு வேண்டாம், அதற்கு பதிலாக நிலம் ஒதுக்க வேண்டும் என்று கோரி, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதன் காரணமாக, ஆக்கிரமிப்பு வீடுகளை இடித்து அகற்றும் பணி நிறுத்திவைக்கப்பட்டது. தற்போது, ஐகோர்ட்டு உத்தரவிட்டதைத் தொடர்ந்து மீதமுள்ள 300 குடும்பங்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யும் பணி தீவிரப்படுத்தப் பட்டுள்ளது, என்றார்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...

அமராவதி அணை நீர்மட்டம் 48.07 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 29.59 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 11ஆம் தேதி நிலவரப்படி 48.07 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நிலவரம்

கோவை மாவட்டத்தில் ஜூலை 11 நிலவரப்படி ஆழியாறு அணையில் 55.4 அடி, பரம்பிக்குளம் அணையில் 18.24 அடி, சோலையாறு அணையில் 91.21 அ...