கோவை: கோவையில் கடந்த மார்ச் மாதம் பள்ளிவாசல் மீது பெட்ரோல் குண்டு தான் வீசப்பட்டது என்பதை தடய அறிவியல் துறையினர் உறுதி செய்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
கோவை: கோவையில் கடந்த மார்ச் மாதம் பள்ளிவாசல் மீது பெட்ரோல் குண்டு தான் வீசப்பட்டது என்பதை தடய அறிவியல் துறையினர் உறுதி செய்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

கோவை கணபதி அருகேயுள்ள வேதம்பாள் நகரில் ஹிதயதுல்லா முஸ்லிம் சுன்னத் ஜமாத் பள்ளிவாசல் உள்ளது. இப்பள்ளி வாசல் மீது கடந்த மார்ச் மாதம் 5ம் தேதி அடையாளம் தெரியாத நபர்கள் பெட்ரோல் குண்டு வீசினர்.
இச்சம்பவம் தொடர்பாக சரவணம்பட்டி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில், இந்த வழக்கில் இந்து முன்னணி பிரமுகர் ஆனந்த் என்பவர் தாக்கப்பட்டதை கண்டித்து பெட்ரோல் குண்டு வீசிய விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பை சேர்ந்த அகில் மற்றும் பாண்டி ஆகிய இருவரை காவல் துறையினர் கைது செய்தனர்.
இதுதொடர்பான வழக்கு கோவை இரண்டாவது குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தடய அறிவியல் துறையின் அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில், பள்ளிவாசல் மீது வீசப்பட்டது பெட்ரோல் குண்டு தான் என்பதை தடய அறிவியல் துறையினர் அறிக்கையில் உறுதி செய்துள்ளனர்.
கோவை கணபதி அருகேயுள்ள வேதம்பாள் நகரில் ஹிதயதுல்லா முஸ்லிம் சுன்னத் ஜமாத் பள்ளிவாசல் உள்ளது. இப்பள்ளி வாசல் மீது கடந்த மார்ச் மாதம் 5ம் தேதி அடையாளம் தெரியாத நபர்கள் பெட்ரோல் குண்டு வீசினர்.
இச்சம்பவம் தொடர்பாக சரவணம்பட்டி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில், இந்த வழக்கில் இந்து முன்னணி பிரமுகர் ஆனந்த் என்பவர் தாக்கப்பட்டதை கண்டித்து பெட்ரோல் குண்டு வீசிய விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பை சேர்ந்த அகில் மற்றும் பாண்டி ஆகிய இருவரை காவல் துறையினர் கைது செய்தனர்.
இதுதொடர்பான வழக்கு கோவை இரண்டாவது குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தடய அறிவியல் துறையின் அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில், பள்ளிவாசல் மீது வீசப்பட்டது பெட்ரோல் குண்டு தான் என்பதை தடய அறிவியல் துறையினர் அறிக்கையில் உறுதி செய்துள்ளனர்.