கோவை: கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் அம்மா நகரும் நியாய விலை கடை வாகனங்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக முதல்வரால் துவக்கி வைக்கப்பட்டது.
கோவை: கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் அம்மா நகரும் நியாய விலை கடை வாகனங்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக முதல்வரால் துவக்கி வைக்கப்பட்டது.
இதில், கோவை மாவட்டத்திற்கு 33 அம்மா நகரும் நியாய விலைக்கடை வாகனங்கள் வழங்கப்பட்டன. இந்த நிலையில், தொண்டாமுத்தூர் பகுதியில் அம்மா நகரும் நியாய விலை கடை வாகனத்தை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இது குறித்து, அமைச்சர் எஸ்.பி வேலுமணி கூறுகையில்:
நோய் தொற்று பரவல் காரணமாக நியாயவிலை கடைகளில் பொதுமக்கள் அதிகமாக கூடுவதை தவிர்க்கவே, அம்மா நகரும் நியாய விலை கடை வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இனி, பொதுமக்கள் அவர்கள் வீட்டிலேயே இருந்து நியாயவிலை கடைகளில், என்னென்ன பொருட்கள் கிடைக்குமோ, அவை அனைத்தையும் இந்த வாகனத்தில் பெற்றுக்கொள்ளலாம். பொது மக்களிடையே, இந்த திட்டம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என தெரிவித்தார்.
மேலும், தொண்டாமுத்தூர் பகுதியில் பயணிகள் பேருந்து நிழற்குடை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்த அமைச்சர், அங்குள்ள பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி மாத்திரைகள் அடங்கிய தொகுப்புகளை வழங்கினார்.