கோவை ரேஸ்கோர்ஸ்‌ பகுதியில்‌ மாதிரி சாலை அமைக்கும்‌ பணிகளில்‌ நடைபாதை அமைக்கும்‌ பணிகளை மாநகராட்சி ஆணைய‌ர் ஆய்வு!

கோவை: கோவை மாநகராட்சி ரேஸ்கோர்ஸ்‌ பகுதியில்‌ மாதிரி சாலை அமைக்கும்‌ பணிகளில்‌ நடைபாதை அமைக்கும்‌ பணிகளை மாநகராட்சி ஆணைய‌ர் பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ இ.ஆ.ப., இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


கோவை: கோவை மாநகராட்சி மத்திய மண்டலம்‌ ரேஸ்கோர்ஸ்‌ பகுதியில்‌ மாதிரி சாலை அமைக்கும்‌ பணிகளில்‌ நடைபாதை அமைக்கும்‌ பணிகளை மாநகராட்சி ஆணைய‌ர் பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ இ.ஆ.ப., இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

உலகம்‌ முழுவதும்‌ கொரோனா வைரஸ்‌ தொற்று பரவிவரும்‌ நிலையில்‌ கொரோனா நோய்‌ தொற்று பரவலைத்‌ தடுப்பதற்காக கோவை மாநகராட்சி தமிழக அரசின்‌ வழிகாட்டு நெறிமுறைகளின்படி பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளைச்‌ செயல்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், அரசின்‌ வழிகாட்டி நெறிமுறைகளை கடைபிடிக்காத வியாபார நிறுவனங்கள்‌ மற்றும்‌ பொதுமக்களுக்கு கீழ்க்கண்டவாறு அபராதம்‌ விதிக்கப்படும்‌ என மாநகராட்சி ஆணையர் பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.

அதன்படி, கோவை மாநகராட்சிப்‌ பகுதிகளில்‌ வசித்து வரும்‌ பொதுமக்கள்‌ மற்றும்‌ அன்றாடம்‌ மாநகருக்குள்‌ வந்து செல்லும்‌ மக்கள்‌ அனைவரும்‌ கீழ்க்கண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாநகராட்சி ஆணையாளா்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ அவர்கள்‌ கேட்டுக்கொள்கிறார்கள்‌.

1. வீட்டிலிருந்து வெளியில்‌ செல்லும்‌ போது அனைவரும்‌ கட்டாயம்‌ முகக்கவசம்‌ (Mask) அணிய வேண்டும்‌.

2. ஒருவருக்கொருவர்‌ சமூக இடைவெளியை கட்டாயம்‌ கடைபிடிக்க வேண்டும்‌.

3. பொது இடங்களில்‌ எச்சில்‌ துப்பக்‌ கூடாது. மேற்கண்ட நடவடிக்கைகளை கடைபிடிக்காத தனி நபர்களுக்கு, கீழ்க்கண்டவாறு அபராதம்‌ விதிக்கப்படும்‌.

* முகக்கவசம்‌ அணியாவிட்டால்‌ ரூ.200/-

* சமூக இடைவெளியை கடைபிடிக்காவிட்டால்‌ ரூ.500/-

* பொது இடங்களில்‌ எச்சில்‌ துப்பினால்‌ ரூ.500/-

4. மேலும்‌ சலூன்‌ கடைகள்‌, அழகு நிலையங்கள்‌ (SPA), உடற்பயிற்சி கூடங்கள்‌, காய்கறி விற்பனைக்‌ கூடங்கள்‌, நகை மற்றும்‌ துணிக்கடைகள்‌, வணிக வளாகங்கள்‌ (MALLS), மார்க்கெட்டுகள்‌ உள்ளிட்ட வியாபார நிறுவனங்கள்‌ மற்றும்‌ இதர பொது இடங்களிலும்‌ சமூக இடைவெளியை கட்டாயம்‌ கடைபிடிக்க வேண்டும்‌.

மேற்கண்ட நடைமுறைகளை கடைபிடிக்காத வியாபார நிறுவனங்களுக்கு ரூ.5000/- அபராதம்‌ விதிக்கப்படும்‌.

கொரோனா தொற்று இல்லாத மாநகராட்சியாக திகழ்ந்திட அனைவரும்‌ அரசு வழிகாட்டு நெறிமுறைகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடுமாறு மாநகராட்சியின்‌ சார்பில்‌ கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.

Newsletter

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...