கோவையில் பசுமை வீடு திட்டத்தின் கீழ் 407 பழங்குடியினர்களுக்கு வீடு கட்டிக்கொடுக்க திட்டம்

கோவை: கோவை மாவட்டத்தில் நடப்பு நிதியாண்டில் பசுமை வீடு திட்டத்தில் 407 பழங்குடியினர்களுக்கு வீடு கட்டிக்கொடுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது, என ஊரக வளர்ச்சிதுறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டத்தில் நடப்பு நிதியாண்டில் பசுமை வீடு திட்டத்தில் 407 பழங்குடியினர்களுக்கு வீடு கட்டிக்கொடுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது, என ஊரக வளர்ச்சிதுறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

மாநில அரசு சார்பில், பசுமை வீடு திட்டமும், மத்திய அரசு சார்பில் பிரதம மந்திரி அனைவருக்கும் வீடு திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டங்களில், வீடுகள் கட்டும் பயனாளிகளுக்கு பசுமை வீடு திட்டத்தில் ரூ.2.10 லட்சமும், பிரதம மந்திரி அனைவருக்கும் வீடு திட்டத்தில் ரூ.1.80 லட்சமும் நிதி அளிக்கப்படுகிறது.

இதனிடையே, பசுமை வீடு திட்டத்தில், பழங்குடியினர்களுக்கு மட்டும் ரூ.2.10 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக நிதி நடப்பு நிதியாண்டில் உயரத்தப்பட்டுள்ளது.

இது குறித்து, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்:

பசுமை வீடு திட்டத்தில் நடப்பு ஆண்டு பழங்குடியினர்களுக்கு மட்டும் திட்ட நிதி ரூ.3 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. மற்றப் பயனாளிகளுக்கு, அதே ரூ.2.10 லட்சம் நிதி வழங்கப்படும். நடப்பு நிதியாண்டில் மாவட்டத்தில் பசுமை வீடு திட்டத்தில் 687 வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், பழங்குடியினர்களுக்கு 407, ஆதி திராவிடர்களுக்கு 70, மற்றவர்களுக்கு 210 பேருக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பழங்குடியினர் பயனாளிகள், பழங்குடியின நல வாரியம் மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர். மற்ற பயனாளிகள், அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம், என்றார்.

Newsletter

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...

அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 10ஆம் தேதி 48.07 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி கொள்ளளவு கொண்...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள பரம்பிக்குளம், சோலையாறு மற்றும் ஆழியார் அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் படிப்படியா...

கோவையில் தேசிய கால்பந்து வீரர்களுக்கு பயிற்சியாளர் வாய்ப்பு - விண்ணப்பிக்க அழைப்பு

Coimbatore மாவட்ட நேரு விளையாட்டரங்கத்தில் Khelo India திட்டத்தின் கீழ் கால்பந்து பயிற்சி மையத்திற்கு தேசிய அளவில் பதக்க...

கோவையில் முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறைகேட்பு மற்றும் தொழில் வாய்ப்பு கருத்தரங்கம்

கோவையில் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கான சிறப்பு குறைகேட்பு கூட்டம் ஜூலை 17 அன்று நடைபெறுகிறது...

கோவையில் பகுதி நேர வேலை தேடி சென்ற கல்லூரி மாணவர் தாக்கப்பட்ட வழக்கு; தவெகவினர் 3 பேர் கைது

கோவை பேரூர் அருகே வேலை தேடி உணவகத்திற்குச் சென்ற கல்லூரி மாணவரை, பார்சல் கட்டித் தர மறுத்ததாகக் கூறி தாக்கிய வழக்கில், த...