கோவை: கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், வாரந்தோறும் திங்கட்கிழமை அன்று மாவட்ட ஆட்சித தலைவர் அலுவலகத்திலும், பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்திலும் நடக்கும் குறை தீர்ப்பு நாள் கூட்டத்திற்கு நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, மனு கொடுக்க வந்து செல்கின்றனர்.
கோவை: கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், வாரந்தோறும் திங்கட்கிழமை அன்று மாவட்ட ஆட்சித தலைவர் அலுவலகத்திலும், பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்திலும் நடக்கும் குறை தீர்ப்பு நாள் கூட்டத்திற்கு நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, மனு கொடுக்க வந்து செல்கின்றனர்.
ஏராளமான பொதுமக்கள் மனு கொடுப்பதற்காக கூட்டமாக சேர்வதால், கொரோனா தொற்று மேலும் பரவும் அபாயம் உள்ளதால், கோவை மாவட்ட ஆட்சி தலைவர் ராசாமணி உத்தரவின் பேரில், பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, ஆனைமலை மற்றும் வால்பாறை உள்ளிட்ட தாலுகாக்களில் உள்ள கிராம நிர்வாக அலுவலகங்களில், இன்று குறைதீர்ப்பு நாள் கூட்டம் நடைபெற்றது.
இந்த முகாமில் இன்று பொள்ளாச்சி தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் 290 மனுக்களும், கிணத்துக்கடவில் 184, ஆனைமலையில் 232, வால்பாறையில் 23 பெறப்பட்டுள்ளதாக, பொள்ளாச்சி சார்-ஆட்சியர் வைத்தியநாதன் தெரிவித்தார்.
இந்த கோரிக்கை மனு மீது உரிய விசாரணை நடத்தி, உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஏராளமான பொதுமக்கள் மனு கொடுப்பதற்காக கூட்டமாக சேர்வதால், கொரோனா தொற்று மேலும் பரவும் அபாயம் உள்ளதால், கோவை மாவட்ட ஆட்சி தலைவர் ராசாமணி உத்தரவின் பேரில், பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, ஆனைமலை மற்றும் வால்பாறை உள்ளிட்ட தாலுகாக்களில் உள்ள கிராம நிர்வாக அலுவலகங்களில், இன்று குறைதீர்ப்பு நாள் கூட்டம் நடைபெற்றது.
இந்த முகாமில் இன்று பொள்ளாச்சி தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் 290 மனுக்களும், கிணத்துக்கடவில் 184, ஆனைமலையில் 232, வால்பாறையில் 23 பெறப்பட்டுள்ளதாக, பொள்ளாச்சி சார்-ஆட்சியர் வைத்தியநாதன் தெரிவித்தார்.
இந்த கோரிக்கை மனு மீது உரிய விசாரணை நடத்தி, உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.