திருப்பூர்: நீட் தேர்வின் போது மத உணர்வுகளை காயப்படுத்தும் வகையில் தாலியை கழற்ற வைத்த சம்பவம் கண்டனத்துக்குரியது என திருப்பூரில் வேலூர் இப்ராஹிம் தெரிவித்தார்.
திருப்பூர்: நீட் தேர்வின் போது மத உணர்வுகளை காயப்படுத்தும் வகையில் தாலியை கழற்ற வைத்த சம்பவம் கண்டனத்துக்குரியது என திருப்பூரில் வேலூர் இப்ராஹிம் தெரிவித்தார்.

திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக சார்பில் பல்வேறு இடங்களில் பாஜக அரசின் நலத்திட்டங்கள் குறித்த பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் கலந்து கொள்ள வந்த தமிழ்நாடு ஏகத்துவ ஜமாஅத் தலைவர் வேலூர் இப்ராஹிம் இன்று பாஜக கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், பாரத பிரதமருக்கு எதிராக திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மேற்கொண்டு வரும் பொய் பிரச்சாரங்களை முறியடிக்கும் வகையிலும், மத்திய அரசின் நலத் திட்டங்களை மக்களுக்கு தெரிவிக்கும் வகையிலும், தமிழகம் முழுவதும் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், தமிழக தேர்தலை மையமாக வைத்து எதிர்க்கட்சிகள் மத்திய அரசின் திட்டங்களை எதிர்த்து நாடகமாடி வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும், தமிழகத்தில் அரசியல் மாற்றம் நிச்சயம் தேவைப்படுவதாகவும், தேசபக்தர்களால் சாத்தியமாகும் என்றவர், நீட் தேர்வு மாணவர்களுக்கு அவசியமான ஒன்று என மக்கள் மத்தியில் புரிந்து கொள்ளப்பட்ட நிலையில், அதனை எதிர்க்கட்சிகள் தவறான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாகவும் இருப்பினும் நீட் தேர்வில் மத உணர்வுகளை காயப்படுத்தும் வகையில் தாலியை கழற்ற வைத்த சம்பவம் கண்டனத்துக்குரியது என்றார்.
மேலும், இனிவரும் காலங்களில் இது போன்ற நடைமுறைகளை அதிகாரிகள் கையாள்வதில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.