புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு, பொள்ளாச்சி பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோவிலில் பக்தர்கள் சமூக இடைவெளியுடன் வழிபாடு

பொள்ளாச்சி: கோவை ரோடு ஆச்சிபட்டி ஆஞ்சநேயர் கோயில் மற்றும் வால்பாறை ரோடு பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோயில் உள்ளிட்ட கோயில்களில் வாரந்தோறும் சனிக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது.

பொள்ளாச்சி: கோவை ரோடு ஆச்சிபட்டி ஆஞ்சநேயர் கோயில் மற்றும் வால்பாறை ரோடு பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோயில் உள்ளிட்ட கோயில்களில் வாரந்தோறும் சனிக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. 



ஊரடங்கு காரணமாக, மூடப்பட்டிருந்த இந்த கோயில்கள் கடந்த செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதி முதல் கட்டுப்பாடுகளுடன் செயல்பட தொடங்கியது. இந்நிலையில், இன்று புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமை என்பதால் பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. 

இதற்காக, சுற்று வட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்து சமூக இடைவெளியை கடைபிடித்து ஆஞ்சநேயரை வழிபட்டு சென்றனர். கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு, உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பின்னரே, கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். 

மேலும், பொள்ளாச்சி சுற்றுவட்டார கிராம பகுதிகளில் மழை பெய்வதால் பக்தர்கள் கூட்டம் குறைவாகவே இருந்தது.

Newsletter

கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு 20 தற்காலிக அரசு வழக்கறிஞர்கள் நியமனம்

கோவை மாவட்டத்திலுள்ள பல்வேறு நீதிமன்றங்களில் அரசு தரப்பில் ஆஜராக 20 தற்காலிக அரசு வழக்கறிஞர்களை தமிழக அரசு நியமித்துள்ளத...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...