காந்திபுரம் வணிக சாலையை சீர் செய்யக்கோரி தேமுதிக புகார்


காந்திபுரம் பகுதியில் பழுதடைந்துள்ள சாலைகளை உடனடியாக சீரமைக்கக் கோரி தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலரான க.விஜயகார்த்திகேயன் அவர்களிடம் மனு அளிக்கப்பட்டது. 

கோவை மாவட்டம் 51 வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளான காந்திபுரம் 5 முதல் 9 வது வீதி, நேரு வீதி, லஜபதிராய் வீதி, விவேகானந்த வீதி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பு நிலத்தடியில் மின்சாரக் கம்பி புதைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. 

தற்போது வரை மிக மந்தமான நிலையிலும், பணிகள் முடிந்த பகுதிகளில் சாலை சீரமைக்கப்படாமலும் மேற்கண்ட பகுதிகளில் மிகமோசமான நிலையில் சாலைகள் காணப்படுகின்றன. 

நகரத்தின் முக்கிய பகுதி மற்றும் வணிக நிறுவனங்கள் நிறைந்த பகுதியாகவும் இருக்கும் காந்திபுரத்திற்கு நாள்தோரும் சுமார் ஆயிரக்கணக்கான மக்கள் வந்துசெல்கின்றனர். மேலும் இப்பகுதிகளில் வசிக்கும் மக்கள், முதியவர்கள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குண்டும், குழியுமான இச்சாலையினால் வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். உடனடியாக இச்சாலைகளை சீரமைக்க வேண்டும் என்று அம்மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...