பொள்ளாச்சி அருகே பெண்ணிடம் நகை பறித்த சம்பவம்: குற்றவாளிகளை விரைந்து கைது செய்த காவலர்களுக்கு கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் பாராட்டு!

கோவை: பொள்ளாச்சி அருகே பெண்ணிடம் 3 சவரன் நகை பறித்த சம்பவத்தில் துரித நடவடிக்கை எடுத்து குற்றவாளிகள் இருவரை கைது செய்த காவலர்களுக்கு கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கி ஊக்குவித்தார்.


கோவை: பொள்ளாச்சி அருகே பெண்ணிடம் 3 சவரன் நகை பறித்த சம்பவத்தில் துரித நடவடிக்கை எடுத்து குற்றவாளிகள் இருவரை கைது செய்த காவலர்களுக்கு கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கி ஊக்குவித்தார்.

பொள்ளாச்சி அருகே உள்ள பட்டணம் பகுதியைச் சேர்ந்தவர் மகாலட்சுமி (35). இவர் பொள்ளாச்சியில் உள்ள நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்தில், அலுவலக உதவியாளராக உள்ளார். கடந்த 15ம் தேதி மகாலட்சுமி, தனது இரு சக்கர வாகனத்தில், தாமரை குளத்தில் இருந்து பட்டணம் கிராமத்திற்கு சென்ற போது, அவர் பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு வாலிபர்கள், மகாலட்சுமி கழுத்தில் இருந்து 3 பவுன் தங்கச் செயினை பறித்துச் சென்றனர்.

இது குறித்து, மகாலட்சுமி கிணத்துக்கடவு போலீசில் புகார் செய்த நிலையில், நேற்று போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது, இருசக்கர வாகனத்தில் வந்த இரு வாலிபர்கள், முன்னுக்கு பின் முரணாக பேசியதால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், மகாலட்சுமியிடம் தங்கச் செயினை பறித்துச் சென்றது தெரியவந்தது. இருவரில் ஒருவர், கோவை சுந்தராபுரம் பகுதியைச் சேர்ந்த பிரசாந்த் (18), இவர் கோவைப்புதூரில் உள்ள கல்லூரியில் 2-ம்ஆண்டு படித்து வருபவர், மற்றொருவர் டிரைவர் நாகார்ஜுனன் (25), என்பது தெரியவந்தது.

இதனையடுத்து, போலீசார் இருவரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து 3 பவுன் நகையை மீட்டனர். மேலும், செயின் பறிப்பு சம்பவத்துக்கு பயன்படுத்தப்பட்ட வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.



இந்த நிலையில், இவ்வழக்கில் துரித நடவடிக்கை மூலம் குற்றவாளிகளை கைது செய்த காவல் துறையினரை பாராட்டி கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் நரேந்திரன் நாயர் இ.கா.ப., அவர்கள் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கி ஊக்குவித்தார்.

Newsletter

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...