பொள்ளாச்சியில், கிளை சிறை கைதி, 4 முதியவர்கள் உட்பட 2 தினங்களில் 12 பேருக்கு கொரோனா தொற்று
பொள்ளாச்சி: பொள்ளாச்சியில், கிளை சிறை கைதி, 4 முதியவர்கள் உட்பட 2 தினங்களில் 12 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
பொள்ளாச்சியில் நேற்று கிளை சிறையில் 35 வயதான ஆண் கைதி, எஸ்.எஸ்., கோவில் வீதியை சேர்ந்த, 24 வயது பெண், நெகமம் காந்திநகர் 42 வயது பெண், ஊஞ்சவேலாம்பட்டி 28 வயது ஆண், வக்கம்பாளையம் 52 வயது பெண் என 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆனது.
இன்று, பொள்ளாச்சி ஊத்துக்காடு ரோடு 61 வயது மூதாட்டி, தெப்பக்குளம் மீதி 60 வயது மூதாட்டி, மகாலிங்கபுரம் நேரு நகர் 80 வயது முதியவர், அவரது மனைவி 71 வயது மூதாட்டி, பணிக்கம்பட்டி 23 வயது ஆண், ஆனைமலை, 52 வயது ஆண், வி.காளியாபுரம் பள்ளி வீதி 51 வயது பெண் ஆகிய 7 பேர் என இரு தினங்களில் 12 பேருக்கு கொரோனா உறுதியானதாக சுகாதாரதுறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட நபர்கள் வசிக்கும் இடங்களில் சுகாதார பணிகள் நடைபெற்று வருகிறது, என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.