திருப்பூர்: திருப்பூரில் மின்சாரம் தாக்கியதில் தனியார் செல்போன் நிறுவன தொழிலாளி படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருப்பூர்: திருப்பூரில் மின்சாரம் தாக்கியதில் தனியார் செல்போன் நிறுவன தொழிலாளி படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருப்பூர் நாச்சிபாளையம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக்ராஜா (23). இவர் தனியார் செல்போன் நிறுவனமான (ஏர்டெல்) பிராட்பேண்ட் கனெக்சன் சர்வீசில் பணியாற்றி வருகிறார். இவர், கொங்கு மெயின் ரோடு பகுதியை சேர்ந்த பூபதி என்பவர் வீட்டிற்கு, பிராட்பேண்ட் இணைப்பு கொடுத்துவிட்டு சென்ற நிலையில், பிராட்பேண்ட் இணைப்பானது, மின் கம்பத்தில் உள்ள உயர் அழுத்த மின் இணைப்புடன் உரசி வந்ததை தொடர்ந்து, வீட்டின் உரிமையாளர் தனியார் செல்போன் நிறுவனத்திடம் புகார் அளித்துள்ளார்.
இதனை தொடர்ந்து, அந்நிறுவனம் சார்பில் கார்த்திக்ராஜா என்ற பணியாளர் சம்பவ இடத்திற்கு வந்து, பிரச்சனையை சரிசெய்து கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக உயர் அழுத்த மின் கம்பியில் கார்த்திக் ராஜாவின் கை பட்டதில், அவரின் உடலில் மின்சாரம் பாய்ந்து தூக்கி எறியப்பட்டார்.
இதில் கார்த்திக் ராஜாவின் உடலில் பலத்த தீ காயம் ஏற்பட, அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மேலும், அதிக மின் அழுத்தம் காரணமாக வீட்டிலிருந்த மின்விசிறி, தொலைக்காட்சி பெட்டி, உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் சேதமடைந்தது. இச்சம்பவம் குறித்து திருப்பூர் வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர் நாச்சிபாளையம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக்ராஜா (23). இவர் தனியார் செல்போன் நிறுவனமான (ஏர்டெல்) பிராட்பேண்ட் கனெக்சன் சர்வீசில் பணியாற்றி வருகிறார். இவர், கொங்கு மெயின் ரோடு பகுதியை சேர்ந்த பூபதி என்பவர் வீட்டிற்கு, பிராட்பேண்ட் இணைப்பு கொடுத்துவிட்டு சென்ற நிலையில், பிராட்பேண்ட் இணைப்பானது, மின் கம்பத்தில் உள்ள உயர் அழுத்த மின் இணைப்புடன் உரசி வந்ததை தொடர்ந்து, வீட்டின் உரிமையாளர் தனியார் செல்போன் நிறுவனத்திடம் புகார் அளித்துள்ளார்.
இதனை தொடர்ந்து, அந்நிறுவனம் சார்பில் கார்த்திக்ராஜா என்ற பணியாளர் சம்பவ இடத்திற்கு வந்து, பிரச்சனையை சரிசெய்து கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக உயர் அழுத்த மின் கம்பியில் கார்த்திக் ராஜாவின் கை பட்டதில், அவரின் உடலில் மின்சாரம் பாய்ந்து தூக்கி எறியப்பட்டார்.
இதில் கார்த்திக் ராஜாவின் உடலில் பலத்த தீ காயம் ஏற்பட, அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மேலும், அதிக மின் அழுத்தம் காரணமாக வீட்டிலிருந்த மின்விசிறி, தொலைக்காட்சி பெட்டி, உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் சேதமடைந்தது. இச்சம்பவம் குறித்து திருப்பூர் வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.