கோவையில் குடிபோதையில் மாமனை டார்ச் லைட்டால் அடித்து கொலை செய்த மருமகன் கைது!

கோவை: கோவை வடிவேலாம் பாளையம் அருகே குடிபோதையில் சொந்த மாமனை டார்ச் லைட்டில் அடித்துக்கொன்ற மருமகனை ஆலாந்துறை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவை வடிவேலாம் பாளையம் அருகே குடிபோதையில் சொந்த மாமனை டார்ச் லைட்டில் அடித்துக்கொன்ற மருமகனை ஆலாந்துறை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவை ஆலாந்துறை மோலப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பூச்சி என்கிற தர்மன் கூலித்தொழிலாளி உள்ளார். இவரது அக்கா மகன் ரவி (24) கூலி வேலை செய்து வந்தார். கடந்த 6 மாதத்திற்கு முன் தங்கள் குடும்ப கோவிலில் கெடா வெட்டி வழிபாடு செய்ததாக தெரிகிறது. இந்த நிகழ்ச்சியில் தர்மனுக்கு, ரவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் சிறிது காலம் பேசிக்கொள்ளாமல் இருந்துள்ளனர். மேலும் கோவிலில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் ரவி உறவினர் வீட்டிற்கு துக்கம் விசாரிக்க காருண்யா நகர் சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பியுள்ளார். அப்போது, வடிவேலாம் பாளையம் அருகே வரும் போது மாமன் தர்மனை பார்த்துள்ளார்.

அப்போது, பேசிக்கொண்டிருந்த இருவரும் அருகே உள்ள காட்டிற்கு சென்று மது அருந்தியுள்ளனர். அச்சமயம் மீண்டும் கோவிலில் நடந்த சம்பவம் தொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதில் ஆத்திரமடைந்த ரவி கையில் வைத்திருந்த டார்ச் லைட்டால் தர்மனை சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து வீட்டிற்கு தப்பிச் சென்றுள்ளார். படுகாயங்களுடன் கிடந்த தர்மன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இது குறித்து தகவலறிந்து அங்கு வந்த ஆலாந்துறை போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தப்பி ஓடிய ரவியை தேடி வந்தனர்.

இந்த நிலையில், மேலப்பாளையம் வீட்டின் அருகே பதுங்கி இருந்த ரவியை போலீசார் கைது செய்து நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். குடிபோதையில் செய்வது அறியாது மாமனை மருமகன் அடித்துக் கொன்ற சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...