கோவையில் செங்கல் சூளைகளில் ஜிஎஸ்டி அதிகாரிகள் சோதனை: கோடி கணக்கில் வரி ஏய்ப்பு செய்து இருக்கலாம், என தகவல்

கோவை: ஜி.எஸ்.டி விதிமீறல்கள் தொடர்பாக தடாகம் பகுதியில் இயங்கி வரும் நான்கு செங்கல் சூளைகள் மற்றும் அதன் உரிமையாளர்களின் அலுவலகங்களில், அதிகாரிகள் இன்று திடீர் சோதனை நடத்தினர்.


கோவை: ஜி.எஸ்.டி விதிமீறல்கள் தொடர்பாக தடாகம் பகுதியில் இயங்கி வரும் நான்கு செங்கல் சூளைகள் மற்றும் அதன் உரிமையாளர்களின் அலுவலகங்களில், அதிகாரிகள் இன்று திடீர் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் வரி ஏய்ப்பு தொடர்பான முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக ஜி.எஸ்.டி மற்றும் மத்திய கலால் துறை இணை ஆணையர் அறிக்கை கொடுத்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உரிய அனுமதியின்றி செயல்பட்டு வரும் செங்கல் சூளைகள் குறித்து கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில், தடாகம் பகுதியில் உள்ள நான்கு செங்கல் சூளைகள் மற்றும் அதன் உரிமையாளர்களின் அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் 60 அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர்.

இதில் ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு தொடர்பான முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. சில கோடி கணக்கில் இவர்கள் வரி ஏய்ப்பு செய்து இருக்கலாம், என தெரியவந்துள்ளது. மேலும் உரிய அனுமதி மற்றும் ஜிஎஸ்டி விதிமுறைகளைக் கடைப்பிடிக்காமல், இயங்கி வரும் மற்ற செங்கல் சூளைகளிலும் சோதனை நடத்தப்படும், என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...